நீடிக்கும் திக்... திக்.. மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை என்ன முடிவு எடுத்ததோ? எப்போது அறிவிப்போ?
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடைபெற்றது. மத்திய அமைச்சரவை கூட்டம் சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற நிலையில் இன்னமும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் அறிவிக்கப்படாததால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. நாளை முதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இந்த கூட்டத் தொடர் நடைபெறும். இந்த சிறப்பு கூட்டத் தொடரை கூட்டியதன் பின்னணியில் ஏதோ ஒரு மறைமுக திட்டம் இருக்கிறது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.

இந்நிலையில் இன்று திடீரென பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாலை 6.30 மணிக்கு கூடியது. ஏற்கனவே ஒரே நாடு ஒரே தேர்தல், இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவது என்கிற பஞ்சாயத்துகள் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது.. இன்னொரு பக்கம் எதற்காக இந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் என்பது புரியாத புதிராக இருக்கிறது.
இந்த களேபரங்களுக்கு மத்தியில்தான் மத்திய அமைச்சரவை கூட்டம் சுமார் 2 மணிநேரம் நடைபெற்றது. ஆனால் மத்திய அமைச்சரவை கூட்டத்துக்குப் பின்னர் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பதுதான் தெரியவில்லை. இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.












Click it and Unblock the Notifications