அதிரடி.. சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை - தாக்கலானது புதிய சட்ட மசோதா
டெல்லி: சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் நபர்களுக்கு தண்டனை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்ட மசோதா கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா என்பது சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் நபர்களுக்கு மரண தண்டனை வழங்க வழிவகுக்கிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் இன்று நடந்தது. இதில் புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதன்படி 160 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் நடைமுறையில் உள்ள சட்டங்களில் அதிரடியாக மாற்றம் கொண்டு வர இந்த மசோதாக்கள் இடம் அளிக்கின்றன.

இந்தியாவில் குற்றம் செய்பவர்கள் மீது ஐபிசி எனும் இந்திய தண்டனை சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPc), இந்திய சாட்சிய சட்டம் (Indian Evidence Act) உள்ளிட்டவற்றின் மூலம் தண்டிக்கப்பட்டு வருகின்றன. இந்த புதிய மசோதா என்பது இதற்கு மாற்றாக உள்ளது.
அதன்படி பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மசோதா, பாரதிய நாய சன்ஹிதா மசோதா, பாரதிய சக்ஷவா மசோதா உள்ளிட்ட 3 சட்ட திருத்த மசோதாக்களை அமித்ஷா தாக்கல் செய்தார். இந்திய குற்றவியல் நீதி முறையில் மிகப் பெரிய சீர்திருத்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இந்த சட்ட திருத்த மசோதா என்பது இந்திய சட்டங்களில் பெரிய அளவில் மாற்றத்தை உருவாக்க உள்ளது. பல பிரிவுகள் நீக்கம் செய்யப்பட உள்ளதோடு, சில பிரிவுகளில் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி இந்தியாவில் தறி்போது 511 சட்டப்பிரிவுகள் உள்ளன. அது புதிய மசோதாவில் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 175 பிரிவுகளில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு புதிய மசோவின்படி 356 சட்டப்பிரிவுகள் இருக்கும்.
இந்தியாவில் 1860ம் ஆண்டு கொண்டு வரப்பபட்டுள்ள சட்டங்கள் தான் தற்போது நடைமுறையில் உள்ளது. இதில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டாலும் கூட இன்னும் ஆங்கிலேயர்கள் வகுத்த சட்டமாகவே இருக்கிறது. இதனை மாற்றம் செய்து தான் புதிய சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி தேசத்துரோக சட்டம் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பெண்கள், குழந்தைகள் மற்றும் மாநிலங்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு கிடைக்கும் தண்டனைகளை அதிகரிக்க இந்த புதிய சட்ட மசோதா என்பது இடமளிக்கிறது. அதன்படி சிறுமிகளை பலாத்காரம் செய்யும் நபர்களுக்கு மரண தண்டனை வழங்க இந்த சட்ட மசோதா இடமளிக்கிறது.
மேலும் கூட்டு பலாத்கார சம்பவங்களில் குற்றத்தின் தீவிரத்தை பொறுத்து மரண தண்டனை வழங்கவும் பரிந்துரை செய்கிறது. குறைந்தபட்சம் என்றால் 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கவும் இந்த சட்டம் வழிவகுத்து கொடுக்கிறது. இதுதவிர தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கினால் குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஓராண்டு சிறை விதிக்கப்படும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications