Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிரடி.. சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை - தாக்கலானது புதிய சட்ட மசோதா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் நபர்களுக்கு தண்டனை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்ட மசோதா கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா என்பது சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் நபர்களுக்கு மரண தண்டனை வழங்க வழிவகுக்கிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் இன்று நடந்தது. இதில் புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதன்படி 160 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் நடைமுறையில் உள்ள சட்டங்களில் அதிரடியாக மாற்றம் கொண்டு வர இந்த மசோதாக்கள் இடம் அளிக்கின்றன.

Union government new bill permit to give Death penalty for rape of a minor

இந்தியாவில் குற்றம் செய்பவர்கள் மீது ஐபிசி எனும் இந்திய தண்டனை சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPc), இந்திய சாட்சிய சட்டம் (Indian Evidence Act) உள்ளிட்டவற்றின் மூலம் தண்டிக்கப்பட்டு வருகின்றன. இந்த புதிய மசோதா என்பது இதற்கு மாற்றாக உள்ளது.

அதன்படி பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா மசோதா, பாரதிய நாய சன்ஹிதா மசோதா, பாரதிய சக்‌ஷவா மசோதா உள்ளிட்ட 3 சட்ட திருத்த மசோதாக்களை அமித்ஷா தாக்கல் செய்தார். இந்திய குற்றவியல் நீதி முறையில் மிகப் பெரிய சீர்திருத்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இந்த சட்ட திருத்த மசோதா என்பது இந்திய சட்டங்களில் பெரிய அளவில் மாற்றத்தை உருவாக்க உள்ளது. பல பிரிவுகள் நீக்கம் செய்யப்பட உள்ளதோடு, சில பிரிவுகளில் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி இந்தியாவில் தறி்போது 511 சட்டப்பிரிவுகள் உள்ளன. அது புதிய மசோதாவில் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 175 பிரிவுகளில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு புதிய மசோவின்படி 356 சட்டப்பிரிவுகள் இருக்கும்.

இந்தியாவில் 1860ம் ஆண்டு கொண்டு வரப்பபட்டுள்ள சட்டங்கள் தான் தற்போது நடைமுறையில் உள்ளது. இதில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டாலும் கூட இன்னும் ஆங்கிலேயர்கள் வகுத்த சட்டமாகவே இருக்கிறது. இதனை மாற்றம் செய்து தான் புதிய சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி தேசத்துரோக சட்டம் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பெண்கள், குழந்தைகள் மற்றும் மாநிலங்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு கிடைக்கும் தண்டனைகளை அதிகரிக்க இந்த புதிய சட்ட மசோதா என்பது இடமளிக்கிறது. அதன்படி சிறுமிகளை பலாத்காரம் செய்யும் நபர்களுக்கு மரண தண்டனை வழங்க இந்த சட்ட மசோதா இடமளிக்கிறது.

மேலும் கூட்டு பலாத்கார சம்பவங்களில் குற்றத்தின் தீவிரத்தை பொறுத்து மரண தண்டனை வழங்கவும் பரிந்துரை செய்கிறது. குறைந்தபட்சம் என்றால் 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கவும் இந்த சட்டம் வழிவகுத்து கொடுக்கிறது. இதுதவிர தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கினால் குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஓராண்டு சிறை விதிக்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+