சீக்கியர் பெண்களை பலாத்காரம் செய்ததே காங்கிரஸ்..நெ.1 தீவிரவாதி ராகுல் காந்தி- மத்திய அமைச்சர் தாக்கு
டெல்லி: சீக்கியர் தாய்மார்களையும் சகோதரிகளையும் தெருக்களில் பலாத்காரம் செய்த கட்சி காங்கிரஸ்தான்.. இந்தியாவின் நம்பர் 1 தீவிரவாதி லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திதான் என்று மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் ரன்வீத் சிங் பிட்டு கடுமையாக விமர்சித்துள்ளார். சீக்கியர்கள் உரிமை தொடர்பான ராகுல் காந்தியின் அமெரிக்கா பேச்சுக்கு எதிராக இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார் மத்திய அமைச்சர் ரன்வீத் சிங் பிட்டு.
அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, சீக்கியர்களின் உரிமைப் போராட்டம் குறித்து பேசினார். சீக்கியர்கள் தலைப்பாகை, கட்டா அணியவும் குருத்வாரா செல்லவும் இந்தியாவில் உரிமை உண்டா? என கேள்வி எழுப்பி இருந்தார். ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்கு, சீக்கியர்களுக்கு என இந்தியாவில் காலிஸ்தான் என்ற தனிநாடு கோருகிற பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான பன்னூன் ஆதரவு தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சையானது.

ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் ராகுல் காந்தியை இந்தியாவின் நம்பர் 1 தீவிரவாதி என விமர்சித்துள்ளார் மத்திய இணை அமைச்சர் ரன்வீத்சிங் பிட்டு.
ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு மத்திய இணை அமைச்சர் ரன்வீத் சிங் பிட்டு அளித்த பேட்டி: ராகுல் காந்தி பெரும்பாலான நாட்களை வெளிநாடுகளில் செலவிடுகிறார். வெளிநாட்டில்தான் ராகுல் காந்தியின் நண்பர்களும் குடும்பத்தினரும் உள்ளனர். ராகுல் காந்திக்கு இந்த தேசத்தின் மீது எந்த ஒரு அன்பும் இல்லை. எப்போது வெளிநாடு சென்றாலும் இந்தியாவுக்கு எதிராக பேசுவதுதான் ராகுல் காந்தியின் வழக்கம். ராகுல் காந்தி இந்துஸ்தானியே அல்ல.
தற்போது பிரிவினைவாதிகளின் ஆதரவைப் பெற்றுள்ளார் ராகுல் காந்தி. இந்தியாவை துண்டாட நினைக்கும் பிரிவினைவாதிகள் ராகுல் காந்தியை ஆதரிக்கின்றனர். இந்தியாவால் தேடப்படுகிற அதிமுக்கிய குற்றவாளிகள் ராகுல் காந்தியை ஆதரிக்கின்றனர். ராகுல் காந்தி பேசியது சீக்கியர்களுக்கு எதிரானது. வெடிகுண்டுகள் தயாரிப்பதில் வல்லுநர்கள்தான் ராகுல் காந்தியை ஆதரிக்கின்றனர். இந்தியாவின் மிகப் பெரிய எதிரியான பன்னூன் தலைக்கு விலை வைத்துள்ளது. ஆனால் அந்த பிரிவினைவாதிதான் ராகுல் காந்தியை ஆதரிக்கிறார்.
இந்தியாவின் முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சித்தது. அது பலன் தரவில்லை. ஆகையால் சீக்கியர்களிடையே பிளவை ஏற்படுத்த காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது. இதே ராகுல் காந்தியின் குடும்பத்தின் சதியால்தானே சீக்கிய பெண்கள் தெருக்களிலேயே பலாத்காரம் செய்யப்பட்டு வீசப்பட்ட கொடூரம் நிகழ்ந்தது. ராகுல் காந்திதான் இந்தியாவின் நம்பர் 1 தீவிரவாதி. இவ்வாறு மத்திய இணை அமைச்சர் ரன்வீத் சிங் பிட்டு கூறினார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications