கொரோனா ஷாக்- சொந்த சகோதரருக்கு ஒரே ஒரு படுக்கை.. ட்விட்டரில் உதவி கேட்ட மத்திய அமைச்சர் வி.கே.சிங்!
டெல்லி: பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் சகோதரருக்கு கொரோனா சிகிச்சை அளிக்க படுக்கை கிடைக்கவில்லை என மத்திய அமைச்சர் வி.கே.சிங் ட்விட்டரில் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன் ஒரே ஒரு படுக்கையாவது கொரோனா சிகிச்சை பெறும் சகோதரருக்கு ஏற்பாடு செய்யுங்கள் எனவும் ட்விட்டரில் மத்திய அமைச்சர் வி.கே.சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலக நாடுகளிலேயே இந்தியாவில்தான் கொரோனா அதிவேகமாக பரவுகிறது. கொரோனா பரவலின் இந்த 2-ம் அலையை எதிர்கொண்டாக வேண்டிய நெருக்கடியில் மத்திய, மாநில அரசுகள் உள்ளன.

நீதிமன்றங்கள் தலையீடு
வட இந்திய மாநிலங்களில் அடிப்படை மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் மிக மோசமான பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. இந்த மாநிலங்களில் கொரோனா உயிரிழப்புகள் அறிவிக்கப்பட்டதை காட்டிலும் அதிகம் இருக்கும் என்பதால் நீதிமன்றங்களே தலையிட்டும் வருகின்றன.

ப. சிதம்பரம் விமர்சனம்
ஆனால் மத்திய அரசுதான் கொரோனா தடுப்பூசிகள், மருந்துகள், படுக்கைகள் உள்ளிட்ட அனைத்தும் போதுமானதாக இருக்கிறது என கூறி வருகிறது. இதனை சுட்டிக்காட்டிய மூத்த காங்கிரஸ் தலைவர் சிதம்பரம், ஆமாம்.. கொரோனா நோயாளிகள்தான் பற்றாக்குறையாக இருக்கிறார்கள் போல என கிண்டலடித்திருந்தார்.

வி.கே.சிங் ட்விட்டர்
இந்த நிலையில் மத்திய அமைச்சர் வி.கே.சிங் தமது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் ஏற்பாடு செய்யப்படவில்லை. என் சகோதரர் ஒருவருக்கு கொரோனா சிகிச்சைக்காக படுக்கைகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என உதவி கேட்டிருக்கிறார்.

மத்திய அமைச்சரால் சர்ச்சை
மத்திய அமைச்சராக இருப்பவர் அதுவும் இந்த நாட்டின் முன்னாள் ராணுவ தளபதியாக பதவி வகித்தவர்... தமது சகோதரருக்கு கொரோனா சிகிச்சைக்கு படுக்கை கிடைக்கவில்லை என பொதுவெளியில் பகிரங்கமாக பதிவிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வி.கே.சிங்கின் இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications