ஜேபி நட்டாவுடன் நிர்மலா சீதாராமன் உட்பட 3 மத்திய அமைச்சர்கள் திடீர் ஆலோசனை- என்னவா இருக்கும்?
டெல்லி: லோக்சபா தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என கூறப்படும் நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 3 மத்திய அமைச்சர்கள் பாஜக அகில இந்திய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர்.
அடுத்த ஆண்டுக்கான லோக்சபா தேர்தல் பணிகளில் பாஜக படுதீவிரமாக களமிறங்கி உள்ளது. லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தெலுங்கானா, ஆந்திரா, ஜார்க்கண்ட், பஞ்சாப் மாநில பாஜக தலைவர்கள் மாற்றப்பட்டு மூத்த தலைவரக்ள் புதிய தலைவர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

ஆந்திரா பாஜக தலைவராக முன்னாள் மத்திய அமைச்சரும் என்டி ராமராவ் மகளுமான புரந்தேஸ்வரி நியமிக்கப்பட்டார். தெலுங்கானா பாஜக தலைவராக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, ஜார்க்கண்ட் பாஜக தலைவராக பாபுலால் மராண்டி, பஞ்சாப் தலைவராக சுனில் ஜாக்கர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்,
இதனைத் தொடர்ந்து இன்று இரவு டெல்[லி பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் ஜேபி நட்டாவை மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அர்ஜூன் ராம் மேக்வால், கிரண் ரிஜிஜூ ஆகியோர் சந்தித்து பேசினர். மத்திய அமைச்சரவை மாற்றம், பாஜக மாநில தலைவர்கள் நியமனம் என பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் 3 மத்திய அமைச்சர்கள், ஜேபி நட்டாவை சந்தித்துள்ளது முக்கியமானதாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications