நாட்டிலேயே அதிக போலி ரேஷன் கார்டுகள் கொண்ட மாநிலம் உத்தர பிரதேசம்தான்.. மத்திய அமைச்சர் தகவல்
டெல்லி: இந்தியாவிலேயே அதிகமான போலி ரேஷன் கார்டுகள் உள்ள மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், மாநிலங்களவை கேள்வி நேரத்தின்போது, இந்தியாவில் ஒருவர் வெவ்வேறு இடங்களில் ரேஷன் கார்டு வைத்திருப்பதை மத்திய அரசு கண்டறிந்துள்ளதா என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை இணை மந்திரி அஸ்வினி குமார் சவுபே எழுத்துப்பூர்வமாக பதில் கொடுத்தார். அதில் ''அஸ்வினி குமார் சவுபே எழுத்துபூரவமாக பதிலளித்தார்.

ரேஷன் கார்டு
'மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் போலியான மற்றும் தகுதியற்ற ரேஷன் அட்டைதாரர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொது வினியோக திட்டத்தை நடத்தும் பொறுப்பு மாநில அரசுகளையே சாரும். பயனாளிகளை அடையாளம் காண்பது, ரேஷன் கார்டு வழங்குவது, ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவது ஆகியவையும் மாநில அரசின் பொறுப்பாகும்.

போலி
போலி ரேஷன் கார்டுகளை ஒழிப்பதற்காக மாநில அரசுகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையிலான 7 ஆண்டுகளில் 4 கோடியே 28 லட்சம் போலி ரேஷன் கார்டுகளை மாநில அரசுகளும், யூனியன் பிரதேச அரசுகளும் ரத்து செய்துள்ளன.

உத்தரப்பிரதேசம்
போலி ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டதில் தமிழகத்தில் 3.04 லட்சம் அட்டைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 1.7 கோடி ரேஷன் அட்டைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளன' என்று அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே தெரிவித்தார். இந்தியாவிலேயே அதிக போலி ரேஷன் கார்டுகள் உள்ள மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.

ஒரே கார்டு
இந்தியாவில் இடம்பெரும் தொழிலாளர்கள் தாங்கள் வசிக்கும் நகரங் களில் உள்ள ரேஷன் கடைகளில், அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்க, 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது. இதனால் பல போலியான ரேஷன் கார்டுகள் அதிகரித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications