மார்ப் செய்த புகைப்படம்.. உத்தரகாண்ட் பாஜக மீது தேர்தல் விதிமீறல் புகார்.. தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
டெல்லி: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக உத்தரகாண்ட் பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா என ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அதற்கான வேலைகளை தேர்தல் ஆணையம் முன்னெடுத்து செய்துவருகிறது.
அதேபோல், 5 மாநில தேர்தலை ஒட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 14 -ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

காங்கிரஸ்
உத்தரகாண்டில் தேர்தல் வேலைகள் நடந்துவருகின்றன. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக உத்தரகாண்ட் பாஜகவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 24 மணி நேரத்துக்குள் பதிலளிக்கெ வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஹரீஷ் ராவத்
உத்தரகாண்ட் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான ஹரீஷ் ராவத் படத்தை தவறாக மார்ப் செய்து, தங்களுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது உத்தரகாண்ட் மாநில பாஜக. அதில் ஹரீஷ் ராவத்தை ஒரு மதத்தின் அடையாளமாக தவறாக சித்தரித்து பதிவு செய்திருந்தனர். இது இணையம் முழுக்க வைரலானது. காங்கிரஸ் கட்சியின் பலர் இந்த போஸ்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றார்கள்.

புகார்
இதையடுத்து, உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் கட்சியினர் இந்த ட்வீட் விவகாரத்தை தேர்தல் ஆணையம் வரை கொண்டு சென்றுள்ளனர். கடந்த பிப்ரவரி 3ம் தேதி இரவு 9.34 மணிக்கு ஹரீஷ் ராவத் புகைப்படத்தை பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட மதத்தினர் புண்படும்படி பதிவிட்டிருக்கிறார்கள். இது தவறு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்திருக்கிறார்கள்.
Recommended Video

எப்.ஐ.ஆர்
காங்கிரஸ் தலைவர் ரணதீப் சூரிவாலா இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டிருக்கிறார். தேர்தல் நடத்தை விதிமுறைகளை பாஜக மீறியதற்காக அவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதியப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். இதையடுத்து, உத்தரகாண்ட் பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications