பரபரப்பு பேட்டி.. குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி தேவையில்லை.. இந்திய மருத்துவ நிபுணர் அதிரடி
குழந்தைகளுக்கு தடுப்பூசி தேவையில்லை என்று மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்
டெல்லி: கொரோனா வைரஸ் பரவல் இப்போதைக்கு முடிவுக்கு வரக்கூடிய ஒரு விஷயமில்லை.. அதனால், குழந்தைகளுக்கு தடுப்பூசி அவசியமில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தொற்றுநோயியல் துறை தலைவர் டாக்டர் சமிரன் பாண்டா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.. ஆனால், முழுமையாக குறையவில்லை.. உலக அளவில் கொரோன வைரஸ் பாதிப்பில் இந்தியா 2வது இடத்தில் தொடர்ந்து வந்தநிலையில், இப்போது, 7-வது இடத்துக்கு வந்துள்ளது.
ஒருநாள் கொரோனா பாதிப்பு 18,359 ஆக உயர்ந்துள்ளது.. அதேசமயம், கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 160 ஆக குறைந்துள்ளது... 1,78,098 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்..

தடுப்பூசி
இன்று இந்தியாவில் தடுப்பூசி போட்டுக் கொண்டோரின் எண்ணிக்கை 99 சதவீதத்தை எட்டிவிட்டது.. விரைவில் 100 கோடியை எட்ட போகிறது.. இதுவரை 75% பேர் கொரோனா தடுப்பூசி முதல் டோஸையும் 31% பேர் கொரோனா தடுப்பூசி 2-வது டோஸையும் போட்டுள்ளனர்... 2வது அலை பரவல் வந்துபோனதில் இருந்தே, தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்..

ஆலோசனை
அந்த அளவுக்கு தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன... 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.. குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடலாமா? வேண்டாமா? என்ற ஆலோசனையும் முன்பு நடந்து வந்தது.. இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரக வல்லுனர் குழு பரிந்துரை செய்திருந்தும், அது தொடர்பாக இதுவரை இன்னும் இறுதி முடிவு வெளியாகவில்லை..

பேட்டி
இப்படிப்பட்ட சூலில்தான், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தொற்றுநோயியல் துறை தலைவரான டாக்டர் சமிரன் பாண்டா ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடத்தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.. செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் தந்த பேட்டியில் சொல்லி உள்ளதாவது: "தொற்றினால் பாதிக்கப்படக்கூடிய பெரியவர்களுக்குதான் தடுப்பூசி போட வேண்டும்.. அதற்குதான் முன்னுரிமை தர வேண்டும்..

வழிகாட்டு நெறிமுறை
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதால் கொரோனா வைரஸ் பரவல் எந்தவித முடிவுக்கும் வந்து விடாது... கொரோனா வைரஸ் பரவலுக்கு குழந்தைகள் காரணமாக மாட்டார்கள்.. கொரோனா தொற்றை குழந்தைகள் பரப்பவில்லை... மிக குறைந்த அளவில்தான் குழந்தைகளுக்கான தொற்று பாதிப்பு ஏற்படுகிறது என்பது பல ஆய்வுகளில் நமக்கு தெரிய வருகிறது..

இணைநோய்
அதனால் பெரியவர்களுக்குத்தான் தடுப்பூசி தேவை.. அத்துடன், கொரோனா கால கட்டுப்பாட்டு வழிகாட்டும் நெறிமுறைகளை பெரியவர்கள்தான் கடைப்பிடிக்க வேண்டும்.. அதிலும் குறிப்பாக, முதியவர்கள், இணை நோய் உடையவர்கள்தான் 2 டோஸையும் செலுத்தி கொள்ள வேண்டும்.. அதேசமயம், குழந்தைகளுக்கான தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் தருவது என்பது ஒழுங்குமுறை சம்பந்தப்பட்ட முடிவாகும்.." என்றார்.












Click it and Unblock the Notifications