ஆளுநர் ரவியை டிஸ்மிஸ் செய்க! 57 எம்.பிக்கள், 50 லட்சம் பேர் கையெழுத்து- ஜனாதிபதியிடம் வைகோ மனு!
டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய கோரி 57 எம்.பிக்கள், 50 லட்சம் பொதுமக்கள் கையெழுத்திட்ட மனுவை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வழங்குகிறார்.
மதிமுகவின் 29-வது பொதுக் குழுவில் தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்கக் கோரும் கையெழுத்து இயக்கம் தொடங்க தீர்மானிக்கப்பட்டது. சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்த கையெழுத்து இயக்கத்தை கடந்த ஜூன் 20-ந் தேதி தொடங்கி வைத்தார். இந்த கையெழுத்து இயக்கத்தில் முதலில் மூத்த இடதுசாரித் தலைவர் நல்லகண்ணு கையெழுத்திட்டார்.

நாகாலாந்து போல கிளர்ச்சி: அப்போது பேசிய வைகோ, தமிழ்நாட்டு நலனுக்கும் அரசியல் சாசனத்துக்கும் முதல் விரோதி தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி. நாகலாந்து மக்களைப் போல தமிழ்நாட்டு மக்களும் கிளர்ந்து எழ வேண்டும். இதற்காகவே கையெழுத்து இயக்கத்தை நடத்துகிறோம் என கூறியிருந்தார்.
50 லட்சம் பேர் கையெழுத்து: இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் மதிமுகவினர் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இந்த மனுவில் மொத்தம் 57 எம்.பிக்கள் கையெழுத்திட்டுள்ளனர். மேலும் எம்.எல்.ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் என சுமார் 50 லட்சம் பேர் இம்மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
துரை வைகோ: மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, இந்த கையெழுத்து இயக்கத்தை முன்னின்று நடத்தினார். இது தொடர்பாக துரை வைகோ கூறுகையில், தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் கேடு விளைவிக்கும் வகையில் ஆளுநர் ஆர்.என். ரவி செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் நிறைவேற்றிய சட்டசபை தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார். ஆகையால் அவரை நீக்க கையெழுத்து இயக்கம் நடத்துகிறோம் என்றார்.
ஜனாதிபதியிடம் ஒப்படைப்பு: தற்போது இந்த கையெழுத்து இயக்கம் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து இன்று ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் வைகோ எம்.பி இந்த கையெழுத்து மனுக்களை ஒப்படைக்கிறார்.
டெல்லியில் வைகோ: இது தொடர்பாக டெல்லியில் வைகோ இன்று செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதிராக செயல்படுகிறார் ஆளுநர் ரவி. அரசியல் உள்நோக்கத்துடன் ஆளுநர் ஆர்.என்.ரவி. செயல்பட்டு வருவதால்தான் அவரை நீக்க வேண்டும் என கையெழுத்து இயக்கம் நடத்தினோம். இந்த கையெழுத்து மனுக்களை இன்று ஜனாதிபதியிடம் நாங்கள் கொடுக்க இருக்கிறோம் என்றார்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications