பாஜக நிறுத்தும் ஜனாதிபதி வேட்பாளரை எந்த சூழலிலும் ஆதரிக்க முடியாது.. அவர் வெல்ல கூடாது! திருமாவளவன்
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், இது தொடர்பாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 14ஆவது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் உள்ளார். அவரது பதவிக்காலம் விரைவில் முடியும் நிலையில், புதிய குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்யத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்ய ஜூலை 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தல்
இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம். இருந்த போதிலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளரை நிறுத்தி அழுத்தம் கொடுக்க விரும்புகிறது. இதற்காக முதலில் சரத் பவார், ஃபாருக் அப்துல்லா, கோபல் காந்தி ஆகியோரின் பெயர்கள் பரீசிலனை செய்யப்பட்டது. இறுதியில் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்கா எதிர்க்கட்சி வேட்பாளராகப் போட்டியிடுவார் என நேற்று அறிவிக்கப்பட்டது.
Recommended Video

திருமாவளவன்
இது தொடர்பாக நேற்று சரத் பவார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு எதிர்க்கட்சிகளும் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, "நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நாட்டில் இருக்கும் அனைத்து கட்சிகளின் ஆதரவும் தேவை.. போட்டியின்றி அவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்கிற தீர்மானத்தை நிறைவேற்றினோம்.

வெல்லக் கூடாது
யஷ்வந்த் சின்கா இந்தியக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் இந்த தேசத்தையும் அரசியலமைப்பு சட்டத்தையும் பாதுகாப்பார் என்ற நம்பிக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு உள்ளது. பாஜக நிறுத்தும் வேட்பாளரை எந்த சூழலிலும் ஆதரிக்க முடியாது. பாஜக வேட்பாளர் வெற்றி பெறக் கூடாது. அந்த வகையில் தான் அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து ஒரு பொது வேட்பாளரை முன்மொழிந்துள்ளோம். இவர் வெற்றி பெறுவது நாட்டிற்கே நல்லது" என்றார்.

பாஜக
நேற்று மாலை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், இரவு பாஜக கூட்டணி வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளார். அதன்படி குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்மு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவரான திரௌபதி முர்மு பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர். ஒடிசாவில் பாஜக, பிஜு ஜனதா தளம் கட்சி கூட்டணி ஆட்சி நடந்தபோது அமைச்சராக இருந்த இவர் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
இது திமுக பண்ணையார்தனம்.. திருமாவளவன் கண்ணீர் தான் விடவில்லை.. கோர்த்துவிட்ட ஆதவ் அர்ஜுனா -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு!











Click it and Unblock the Notifications