பாஜக நிறுத்தும் ஜனாதிபதி வேட்பாளரை எந்த சூழலிலும் ஆதரிக்க முடியாது.. அவர் வெல்ல கூடாது! திருமாவளவன்
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், இது தொடர்பாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 14ஆவது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் உள்ளார். அவரது பதவிக்காலம் விரைவில் முடியும் நிலையில், புதிய குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்யத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்ய ஜூலை 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சொல்லியடித்த பாஜக... ஜனாதிபதி தேர்தலில் உறுதியான திரௌபதி முர்முவின் வெற்றி - ஒடிசா முதல்வர் வாழ்த்து
குடியரசுத் தலைவர் தேர்தல்
இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம். இருந்த போதிலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளரை நிறுத்தி அழுத்தம் கொடுக்க விரும்புகிறது. இதற்காக முதலில் சரத் பவார், ஃபாருக் அப்துல்லா, கோபல் காந்தி ஆகியோரின் பெயர்கள் பரீசிலனை செய்யப்பட்டது. இறுதியில் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்கா எதிர்க்கட்சி வேட்பாளராகப் போட்டியிடுவார் என நேற்று அறிவிக்கப்பட்டது.
Recommended Video
திருமாவளவன்
இது தொடர்பாக நேற்று சரத் பவார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு எதிர்க்கட்சிகளும் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, "நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நாட்டில் இருக்கும் அனைத்து கட்சிகளின் ஆதரவும் தேவை.. போட்டியின்றி அவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்கிற தீர்மானத்தை நிறைவேற்றினோம்.
வெல்லக் கூடாது
யஷ்வந்த் சின்கா இந்தியக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் இந்த தேசத்தையும் அரசியலமைப்பு சட்டத்தையும் பாதுகாப்பார் என்ற நம்பிக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு உள்ளது. பாஜக நிறுத்தும் வேட்பாளரை எந்த சூழலிலும் ஆதரிக்க முடியாது. பாஜக வேட்பாளர் வெற்றி பெறக் கூடாது. அந்த வகையில் தான் அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து ஒரு பொது வேட்பாளரை முன்மொழிந்துள்ளோம். இவர் வெற்றி பெறுவது நாட்டிற்கே நல்லது" என்றார்.
பாஜக
நேற்று மாலை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், இரவு பாஜக கூட்டணி வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளார். அதன்படி குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்மு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவரான திரௌபதி முர்மு பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர். ஒடிசாவில் பாஜக, பிஜு ஜனதா தளம் கட்சி கூட்டணி ஆட்சி நடந்தபோது அமைச்சராக இருந்த இவர் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.