இங்கிலாந்துக்கான இந்தியாவின் தூதராக விக்ரம் துரைசாமி நியமனம்
டெல்லி: பிரிட்டனுக்கான (இங்கிலாந்து) இந்தியாவின் புதிய தூதராக விக்ரம் துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கான இந்திய தூதரான காயத்ரி இஸ்ஸார் குமார், ஜூன் 30-ந் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கான புதிய தூதராக விக்ரம் துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

1992-ம் ஆண்டு பேட்ச் ஐ.எப்.எஸ். அதிகாரியான விக்ரம் துரைசாமியின் தந்தை, 1971-ம் ஆண்டு வங்கதேச விடுதலைக்கான இந்தியாவின் போரில் விமானப் படை விமானியாக பணியாற்றியவர். டெல்லி பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் விக்ரம் துரைசாமி.
மத்திய அரசில் ஓராண்டு காலம் பத்திரிகையாளராகவும் பணியாற்றினார். பின்னர் வெளியுறவு அமைச்சகத்தில் பணியில் சேர்ந்தார். 1994-ல் சீனாவுக்கான இந்திய தூதரகத்தில் 3-ம் நிலை செயலராக முதலில் பணியாற்றினார். பின் இந்தியா திரும்பிய அவர், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் செயலாளராகவும் பணியாற்றினார்.
ஆப்கானிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான் தூதராக விக்ரம் குமார் துரைசாமி பணியாற்றி உள்ளார். வங்கதேசத்துக்கான இந்திய தூதராகவும் விக்ரம் குமார் துரைசாமி பணிபுரிந்தார். வங்கதேசத்தில் பணிபுரிந்த போது டாக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், வங்கதேச விடுதலைக்காக பாகிஸ்தானுடன் இந்தியா நடத்திய யுத்தத்தில் தமது தந்தை இந்திய விமானப்படை விமானியாக பணியாற்றியதை பெருமிதத்துடன் நினைவு கூர்ந்தார். வங்கதேசத்தில் 2 ஆண்டுகாலம் இந்தியாவின் தூதராக பணியாற்றினார் விக்ரம் துரைசாமி.
தற்போது இங்கிலாந்துக்கான இந்தியாவின் புதிய தூதராக விக்ரம் துரைசாமி நியமிக்கப்பட்டிருக்கிறார். விக்ரம் துரைசாமி சீனா, பிரெஞ்ச், கொரிய மொழிகளையும் பேசக் கூடியவர், படிப்பு, விளையாட்டு, பயணங்களில் ஆர்வம் கொண்டவர் விக்ரம் துரைசாமி. மத்தியில் பாஜக ஆட்சியில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்த தூதராக தமிழரான டி.எஸ். திருமூர்த்தி நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்தியா- இங்கிலாந்து இடையேயா உறவுகள் வலுவடைந்து நிலையில் விக்ரம் துரைசாமியின் நியமனம் முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தின் புதிய பிரதமருக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. போரிஸ் ஜான்சன் பதவி விலகலைத் தொடர்ந்து புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் களத்தில் நிற்கிறார். ரிஷி சுனக், அடுத்தடுத்த சுற்றுகளில் வென்று தற்போது இறுதி வேட்பாளராக களம் காண்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications