இங்கிலாந்துக்கான இந்தியாவின் தூதராக விக்ரம் துரைசாமி நியமனம்
டெல்லி: பிரிட்டனுக்கான (இங்கிலாந்து) இந்தியாவின் புதிய தூதராக விக்ரம் துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கான இந்திய தூதரான காயத்ரி இஸ்ஸார் குமார், ஜூன் 30-ந் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கான புதிய தூதராக விக்ரம் துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

1992-ம் ஆண்டு பேட்ச் ஐ.எப்.எஸ். அதிகாரியான விக்ரம் துரைசாமியின் தந்தை, 1971-ம் ஆண்டு வங்கதேச விடுதலைக்கான இந்தியாவின் போரில் விமானப் படை விமானியாக பணியாற்றியவர். டெல்லி பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் விக்ரம் துரைசாமி.
மத்திய அரசில் ஓராண்டு காலம் பத்திரிகையாளராகவும் பணியாற்றினார். பின்னர் வெளியுறவு அமைச்சகத்தில் பணியில் சேர்ந்தார். 1994-ல் சீனாவுக்கான இந்திய தூதரகத்தில் 3-ம் நிலை செயலராக முதலில் பணியாற்றினார். பின் இந்தியா திரும்பிய அவர், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் செயலாளராகவும் பணியாற்றினார்.
ஆப்கானிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான் தூதராக விக்ரம் குமார் துரைசாமி பணியாற்றி உள்ளார். வங்கதேசத்துக்கான இந்திய தூதராகவும் விக்ரம் குமார் துரைசாமி பணிபுரிந்தார். வங்கதேசத்தில் பணிபுரிந்த போது டாக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், வங்கதேச விடுதலைக்காக பாகிஸ்தானுடன் இந்தியா நடத்திய யுத்தத்தில் தமது தந்தை இந்திய விமானப்படை விமானியாக பணியாற்றியதை பெருமிதத்துடன் நினைவு கூர்ந்தார். வங்கதேசத்தில் 2 ஆண்டுகாலம் இந்தியாவின் தூதராக பணியாற்றினார் விக்ரம் துரைசாமி.
தற்போது இங்கிலாந்துக்கான இந்தியாவின் புதிய தூதராக விக்ரம் துரைசாமி நியமிக்கப்பட்டிருக்கிறார். விக்ரம் துரைசாமி சீனா, பிரெஞ்ச், கொரிய மொழிகளையும் பேசக் கூடியவர், படிப்பு, விளையாட்டு, பயணங்களில் ஆர்வம் கொண்டவர் விக்ரம் துரைசாமி. மத்தியில் பாஜக ஆட்சியில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்த தூதராக தமிழரான டி.எஸ். திருமூர்த்தி நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்தியா- இங்கிலாந்து இடையேயா உறவுகள் வலுவடைந்து நிலையில் விக்ரம் துரைசாமியின் நியமனம் முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தின் புதிய பிரதமருக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. போரிஸ் ஜான்சன் பதவி விலகலைத் தொடர்ந்து புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் களத்தில் நிற்கிறார். ரிஷி சுனக், அடுத்தடுத்த சுற்றுகளில் வென்று தற்போது இறுதி வேட்பாளராக களம் காண்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
இன்ஸ்டா முதல் யூடியூப் வரை எல்லாவற்றுக்கும் தடை.. 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பிரிட்டன் அதிரடி












Click it and Unblock the Notifications