இங்கிலாந்துக்கான இந்தியாவின் தூதராக விக்ரம் துரைசாமி நியமனம்
டெல்லி: பிரிட்டனுக்கான (இங்கிலாந்து) இந்தியாவின் புதிய தூதராக விக்ரம் துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கான இந்திய தூதரான காயத்ரி இஸ்ஸார் குமார், ஜூன் 30-ந் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கான புதிய தூதராக விக்ரம் துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

1992-ம் ஆண்டு பேட்ச் ஐ.எப்.எஸ். அதிகாரியான விக்ரம் துரைசாமியின் தந்தை, 1971-ம் ஆண்டு வங்கதேச விடுதலைக்கான இந்தியாவின் போரில் விமானப் படை விமானியாக பணியாற்றியவர். டெல்லி பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் விக்ரம் துரைசாமி.
மத்திய அரசில் ஓராண்டு காலம் பத்திரிகையாளராகவும் பணியாற்றினார். பின்னர் வெளியுறவு அமைச்சகத்தில் பணியில் சேர்ந்தார். 1994-ல் சீனாவுக்கான இந்திய தூதரகத்தில் 3-ம் நிலை செயலராக முதலில் பணியாற்றினார். பின் இந்தியா திரும்பிய அவர், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் செயலாளராகவும் பணியாற்றினார்.
ஆப்கானிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான் தூதராக விக்ரம் குமார் துரைசாமி பணியாற்றி உள்ளார். வங்கதேசத்துக்கான இந்திய தூதராகவும் விக்ரம் குமார் துரைசாமி பணிபுரிந்தார். வங்கதேசத்தில் பணிபுரிந்த போது டாக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், வங்கதேச விடுதலைக்காக பாகிஸ்தானுடன் இந்தியா நடத்திய யுத்தத்தில் தமது தந்தை இந்திய விமானப்படை விமானியாக பணியாற்றியதை பெருமிதத்துடன் நினைவு கூர்ந்தார். வங்கதேசத்தில் 2 ஆண்டுகாலம் இந்தியாவின் தூதராக பணியாற்றினார் விக்ரம் துரைசாமி.
தற்போது இங்கிலாந்துக்கான இந்தியாவின் புதிய தூதராக விக்ரம் துரைசாமி நியமிக்கப்பட்டிருக்கிறார். விக்ரம் துரைசாமி சீனா, பிரெஞ்ச், கொரிய மொழிகளையும் பேசக் கூடியவர், படிப்பு, விளையாட்டு, பயணங்களில் ஆர்வம் கொண்டவர் விக்ரம் துரைசாமி. மத்தியில் பாஜக ஆட்சியில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்த தூதராக தமிழரான டி.எஸ். திருமூர்த்தி நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்தியா- இங்கிலாந்து இடையேயா உறவுகள் வலுவடைந்து நிலையில் விக்ரம் துரைசாமியின் நியமனம் முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தின் புதிய பிரதமருக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. போரிஸ் ஜான்சன் பதவி விலகலைத் தொடர்ந்து புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் களத்தில் நிற்கிறார். ரிஷி சுனக், அடுத்தடுத்த சுற்றுகளில் வென்று தற்போது இறுதி வேட்பாளராக களம் காண்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications