தமிழகத்தில் ஓமிக்ரான் வைரஸ் வேகமெடுக்க காரணம் என்ன?.. எப்படி பரவியது?.. வெளியான தகவல்!
டெல்லி: உலகம் முழுவதும் கொடிய கொரோனா வைரஸ் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பாடாய்படுத்தி வரும் நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை ஓமிக்ரான் பல நாடுகளிலும் மிக வேகமாக பரவி வருகிறது.
இந்த ஓமிக்ரான் வைரஸ் மிகவும் ஆபத்தானது என்றும் முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ஓமிக்ரான் டெல்டா வைரஸை விட வீரியம்மிக்கது என்றும் கூறப்படுகிறது.

அச்சுறுத்தும் ஓமிக்ரான் வைரஸ்
இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தாலும் அதனையும் தாண்டி ஓமிக்ரான் வைரஸ் புகுந்து விட்டது. இந்தியாவில் 422 ஓமிக்ரான் வைரஸ் பாதிப்புகள் பதிவாகி உள்ளன.
நாட்டில் முதன் முதலில் கர்நாடகாவில்தான் ஓமிக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு என்று பல மாநிலங்களுக்கும் பரவியது. தமிழ்நாட்டிலும் ஓமிக்ரான் வைரஸ் பரவி அச்சுறுத்தி வருகிறது.

ஒருவர் மூலம் வேகமெடுத்த கொரோனா
தமிழகத்தில் முதன் முதலில் ஒருவருக்குதான் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு மேலும் 33 பேருக்கு ஓமிக்ரான்பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் ஓமிக்ரான் மொத்த பாதிப்பு 34 ஆக உயர்ந்தது. அதாவது சென்னையில் ஒருவர் மூலம் மட்டுமே 39 பேருக்கும் ஒமிக்ரான் அறிகுறி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

3,038 பேருக்கு பரிசோதனை
ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அந்த ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்ட டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பிறகுதான் அவர்களுடன் தொடர்பில் இருந்த 3,038 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
Recommended Video

7 நாள் தனிமை கட்டாயம்
அதில் 54 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இதில் 39 பேருக்குஒமிக்ரான் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த முதல் நோயாளி வெளிநாடே செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதுவே தமிழ்நாட்டில் ஓமிக்ரான் வைரஸ் வேகமெடுக்க காரணமாகும். ஓமிக்ரான் மேலும் பரவாமல் இருக்க வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு 7 நாள் தனிமை கட்டாயம் என்று தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. பொதுவெளியில் புத்தாண்டு கொண்டாடுவதை தவிர்க்கும்படியும் மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications