Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

10 முறை முதல்வர்.. ஒரே நேரத்தில் சம்பளம்+ ஓய்வூதியத்தை பெறும் நிதிஷ்! அது எப்படி? எவ்வளவு கிடைக்கும்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகாரில் நடந்த சட்டசபைத் தேர்தலில் என்டிஏ அரசு மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது. அங்கு நிதிஷ்குமார் 10வது முறையாக நேற்று முதல்வராகப் பதவியேற்றார். அவர் இதற்கு முன்பு எம்பியாகவும் இருந்துள்ளார். அதன்படி முதல்வராக அவருக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும்... எம்பியாக எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

பீகார் மாநிலத்தில் கடந்த வாரம் தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில் என்டிஏ மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது. 200+ தொகுதிகளில் என்டிஏ வென்ற நிலையில், நேற்றைய தினம் அங்கு அமைச்சரவை பதவியேற்றது. பீகார் மாநில முதல்வராக நிதிஷ்குமார் 10வது முறையாகப் பதவியேற்றார்.

What is the salary and Pension for 10 Time Chief minister Nitish Kumar his Dual Pensions Explained

நிதிஷ்குமார்

நிதிஷ்குமார் இப்போது முதல்வராக இருக்கும் நிலையில், அதற்கான ஊதியத்தைப் பெறுவார்.. அதேநேரம் இதற்கு முன்பு அவர் எம்பியாக இருந்துள்ளார். எனவே அதற்கான ஓய்வூதியமும் கிடைக்கும். மேலும், முதலமைச்சர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் கூட, சட்டசபை உறுப்பினராக இருந்ததால் அவருக்கு ஓய்வூதியம் கிடைக்கும். இதன் மூலம் ஓய்வுக்குப் பிறகு அவருக்கு ஒன்று இரண்டாகவே ஓய்வூதியங்கள் கிடைக்கும்.

ஓய்வூதியம் எவ்வளவு?

நிதிஷ் குமார் 1989 முதல் 2004 வரை எம்பியாக இருந்துள்ளார். நமது நாட்டின் சட்டப்படி ஒருவர் ஒரு நாள் எம்பியாக இருந்தாலும் கூட அவர்களுக்கு ₹31,000 ஓய்வூதியம் பெறுவார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் எம்பியாக இருந்தால் ஒவ்வொரு ஆண்டுக்கும் கூடுதலாக ₹2,500 வழங்கப்படும். அகவிலைப்படி எல்லாம் சேர்த்தால் அவருக்கு ஓய்வூதியமாகவே ₹68,500 கிடைக்கும்.

இது அவரது முந்தைய பதவிக்கான ஓய்வூதியம். இப்போது அவர் பீகார் முதல்வராக இருக்கும் நிலையில், அவருக்குச் சம்பளமாக ₹2.5 லட்சம் கிடைக்கும். மேலும், வீடு, அலுவலகம் உள்ளிட்ட சலுகைகளும் அவருக்குக் கிடைக்கும். பீகாரில் இதர அமைச்சர்களுக்கு மாதச் சம்பளம் ₹65,000 தரப்படுகிறது. மேலும், அலவன்ஸாக ₹70,000 வரை வழங்கப்படும்.

சம்பளம்

நிதிஷ்குமார் 10 முறை முதல்வராக இருந்தாலும் அவர் எம்எல்ஏ இல்லை. மாறாக அவர் எம்எல்சி எனப்படும் சட்ட மேலவை மூலமாகவே உறுப்பினராக இருக்கிறார். இருப்பினும், இரண்டிற்கும் ஓய்வூதிய விதிகள் ஒன்றுதான். அதன்படி எம்எல்சி ஓய்வூதியமாக அவருக்கு ₹45,000 கிடைக்கும்.

மொத்த ஓய்வூதியம்

அவர் 1985-இல் முதல் முறையாக எம்எல்ஏ ஆனார். அதற்கு அடிப்படை ஓய்வூதியமாக ₹45,000 கிடைக்கும்.. அதன் பிறகு சில ஆண்டுகள் தேசிய அரசியலில் கவனம் செலுத்திய அவர், 2004இல் மீண்டும் இரண்டாவது முறையாக எம்எல்சி ஆனார். முன்பே குறிப்பிட்டது போல அங்கு எம்எல்ஏ மற்றும் எம்எல்சிக்கான ஓய்வூதிய விதிகள் ஒரே மாதிரியானவை. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியக் கணக்கீட்டைப் போலவே இதற்கும் கணக்கிடப்படும்.

அதாவது அவரது பணிக் காலத்தைப் பொறுத்து இந்த ஓய்வூதியம் கணக்கிடப்படும். நிதிஷ் குமார் 2005 முதல் 2025 வரை 21 ஆண்டுகள் எம்எல்சியாக இருந்துள்ளார். இந்த காலத்திற்கான அவரது மொத்த ஓய்வூதியம் ₹8,40,000. அடிப்படை ஓய்வூதியமான ₹45,000-ஐ சேர்த்தால், எம்எல்சியாக அவரது மொத்த ஓய்வூதியம் ₹1,38,000 ஆகும். இதை அவரது எம்பி ஓய்வூதியத்தோடு சேர்த்தால் அவருக்கு மொத்த ஓய்வூதியமாக மட்டும் ₹2,03,000 கிடைக்கும்.

பீகார் அரசியல்

பீகார் சட்டசபை உறுப்பினர்கள், அதாவது எம்எல்ஏக்களின் மாதச் சம்பளம் ₹1.4 லட்சம் முதல் ₹1.5 லட்சம் வரை இருக்கும். அவர்களின் அடிப்படைச் சம்பளம் ₹50,000 ஆகும். இதுபோக தொகுதிப் படி ₹55,000, உதவியாளருக்கான ₹40,000 மற்றும் இதர செலவுகளுக்கு ₹15,000 வழங்கப்படுகிறது.. மேலும், சட்டசபை நடக்கும்போது தினசரி ₹3,000 கூடுதலாகப் பெறுகின்றனர்.

பீகார் எம்எல்ஏக்களுக்கு வேறு பல சலுகைகளும் தரப்படுகிறது. ஆண்டுக்கு ₹4 லட்சம் வரை ரயில் அல்லது விமானப் பயணங்களை மேற்கொள்ளலாம். மேலும், ₹25 லட்சம் வரை குறைந்த வட்டி கார் கடன்கள், பாட்னாவில் அரசு பங்களா வழங்கப்படும். மேலும், எம்எல்ஏ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச அல்லது சலுகை விலையில் மருத்துவச் சிகிச்சையும் தரப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+