Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குழந்தைகள் உயிரை குடித்த இருமல் மருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதா? கேட்கிறது WHO

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய பிரதேசத்தில் 20 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான இருமல் மருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதா என இந்தியாவிடம் உலக சுகாதார நிறுவனம் கேள்வி எழுப்பி உள்ளது. மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதா என்பது தெரிந்தால் தான் எச்சரிக்க முடியும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டத்தில், 1 முதல் 7 வயது வரை உள்ள 14 குழந்தைகள், அடுத்தடுத்து உயிரிழந்தனர். திடீரென ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பு, உயிரிழப்புக்கு காரணம் என்பது தெரியவந்தது. இதற்கான காரணம் குறித்து, அம்மாநில அரசு விசாரித்த போது, காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் செயல்படும், ஸ்ரீசன் பார்மா என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட, 'கோல்ட்ரிஃப்' இருமல் மருந்து, மற்றொரு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட 'நெக்ஸ்ட்ரோ டி.எஸ்.' மருந்துகள் காரணம் என்பது தெரியவந்தது.

WHO Seeks Clarification from India on Export of Cough Syrup Linked to Child Deaths

இறந்த குழந்தைகளின் சிறுநீரக திசுவில், 'டை எத்திலீன் கிளைசால்' என்ற ரசாயன வேதிப்பொருள் இருந்தது தெரியவந்தது. பெயின்ட், மை போன்ற பொருட்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயனம், சம்பந்தப்பட்ட இருமல் மருந்துகளில் கலந்திருந்தது. இதையடுத்து, மத்திய பிரதேச அரசு, இந்த மருந்து நிறுவனத்தை சோதனை செய்து, நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது.

இதனையடுத்து அந்த மருந்துக்கு தமிழ்நாடு, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், புதுச்சேரி, உ.பி., ஜார்க்கண்ட், கேரளா, உள்ளிட்ட மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, இருமல் மருந்தை தயாரித்த நிறுவனத்தின் கிளை ஆலை காஞ்சிபுரம் மாவட்டம் சுக்குவார்சத்திரம் பகுதியில் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இந்நிலையில், இந்த மருந்தை சாப்பிட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4 குழந்தைகள் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை உயர்ந்தது. இந்த சம்பவத்தில் பிரவின் சோனி என்ற டாக்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான கோல்ட்ரிஃப் என்ற இருமல் மருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து மத்திய அரசிடம் உலக சுகாதார அமைப்பு கேள்வி எழுப்பி உள்ளது. இதற்கு இந்திய அரசு அளிக்கும் பதிலை வைத்து, மற்ற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+