விமானம் பறக்கும்போது இண்டர்நெட் வசதி இல்லாதது ஏன்? தயாநிதி மாறன் கேள்வி.. விளக்கிய மத்திய அமைச்சர்
டெல்லி: இந்திய விமானங்களில் இணைய சேவை ஏன் இல்லை? என்று சென்னை மத்திய தொகுதியின் எம்பியான தயாநிதி மாறன் நேற்று நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா விளக்கமளித்தார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நாடாளுமன்றத்தின் பூஜ்ஜிய நேரத்தில் சென்னை மத்திய தொகுதியின் எம்பியாக இருக்கும் தயாநிதி மாறன் நேற்று லோக்சபாவில் ஒரு கேள்வி எழுப்பினார்.
இதுதொடர்பாக தயாநிதி மாறன், ‛‛விமான பயணத்தின்போது இணைய சேவை வசதி ஏன் இல்லை? உலக வரைபடத்தில் பார்த்தால் சர்வதேச விமான பயணங்களில் இணைய சேவை கிடைக்காத ஒரே ஒரு இடம் இந்தியாதான். இது நாட்டின் டிஜிட்டல் துறையில் நிலவும் பற்றாக்குறையை காட்டுகிறது. இந்திய வான்வெளி பரப்பிலும் விமானங்களுக்குள் வைஃபை வசதியை அனுமதிக்க வேண்டும்'' என்று கேள்வி கூறினார்.
இதற்கு முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், தற்போதைய மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சருமான ஜோதிராதித்ய சிந்தியா பதிலளித்தார். அப்போது அவர், ‛‛இந்த விதிகளை வரையறுப்பது சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் பொறுப்பு. தொலை தொடர்பு துறையும் இதற்கான விதிமுறைகளை வகுத்து வருகிறது. நாம் வளர்ந்த நாடாக, நம் சேவைகளைக் கொண்டிருக்கும்போது 6G தொழில்நுட்பத்தில் உலகை வழிநடத்துவோம்'' என்றார்.
இந்த வேளையில் தயாநிதி மாறன் ‛‛நம்முடைய வான்வெளி பரப்பில் விமானங்கள் செல்லும்போது ஏன் இணைய சேவைகளை தடை செய்கிறீர்கள்? நான் சென்னையில் இருந்து டெல்லிக்கு வரும்வரை இரண்டரை மணி நேரம் இணைய வசதி இல்லாமல் தான் இருந்தேன். நாடு முழுவதும் இணைய சேவை கிடைக்க அரசு ஏன் முயற்சி எடுக்கவில்லை?" என்று கேள்வி கேட்டார்.
அதற்கு ஜோதிராதித்ய சிந்தியா, ‛‛"விமான நிறுவனங்கள் ஒவ்வொரு விமானத்திலும் ட்ரான்ஸ்பாண்டர்களை பொருத்த வேண்டும். அப்போதுதான் சிக்னல்கள் கிடைக்கும். ட்ரான்ஸ்பாண்டர்கள் பொருத்துவது விமான நிறுவனங்களின் திறனை சார்ந்து உள்ளது'' என்று கூறினார்.
இதையடுத்து தயாநிதி மாறன், ‛‛எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையின் விலை ஏன் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது?. இது கிராமப்புற மக்களை பாதிக்கும். இதை மலிவாகக் கிடைக்கச் செய்ய வேண்டும்’’ என்று வாதம் வைத்தார்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications