இவங்க எங்க இங்கே.. ராதிகாவை பார்த்ததும் சட்டென வியந்த மோடி.. அந்த சிரிப்பு.. என்ன நடந்தது?
டெல்லி: நேற்று டெல்லியில் நடந்த தமிழ் புத்தாண்டு நிகழ்வில் பிரதமர் மோடி நடிகை ராதிகா சரத் குமாரை நேரில் சந்தித்தார்.
டெல்லியில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று பாஜக இணை அமைச்சர் எல் முருகன் மூலம் கொண்டாடப்பட்டது. எல் முருகனின் டெல்லி இல்லத்தில் இந்த மாபெரும் கொண்டாட்டம் நிகழ்ந்தது.

எல் முருகன் சார்பாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சிறிய அளவிலான கலை நிகழ்ச்சிகள், தமிழ்நாடு கலாச்சாரத்தை பறைசாற்றும் நிகழ்வுகள் இந்த கொண்டாட்டத்தில் நடந்தது. தமிழ்நாட்டை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கூட இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பாஜக எம்எல்ஏக்கள் வானதி சீனிவாசன், சரஸ்வதி, நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதேபோல் பாஜகவின் ஏபி முருகானந்தம் போன்றவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலை இந்த நிகழ்வை புறக்கணித்தார்.
இந்த நிகழ்விற்கு தமிழ்நாட்டை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் சென்று இருந்தனர். பாஜகவுடன் நெருக்கமாக இருப்பவர்கள், நட்பாக இருப்பவர்கள், சினிமா உலக பிரபலங்கள் என்று பலர் சென்று இருந்தனர்.

இந்த நிகழ்வில் ராதிகா சரத் குமாரும் கலந்து கொண்டு இருந்தார். அவர் பிரதமர் மோடி வரும் போது அந்த வரிசையில் நின்று கொண்டு இருந்தார். வரிசையாக பல்வேறு தலைவர்களை பார்த்துக்கொண்டு இருந்த மோடி ராதிகா சரத் குமாரையும் பார்த்தார்.
ஏற்கனவே அவருக்கு ராதிகாவை தெரியும் என்பதால், அவரை பார்த்ததும் மோடி ஒரு புன் சிரிப்பு சிரித்தார்.
பதிலுக்கு ராதிகா சரத்குமாரும் பிரதமர் மோடியை பார்த்து சிரித்து அவருக்கு வணக்கம் வைத்தார். இந்த நிகழ்வு அரசியல் நிகழ்வாக இல்லாமல் கலாச்சார நிகழ்வாக அமைக்கப்பட்டு இருந்தது.
இதனால் அரசியல் கடந்தும் கூட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அங்கே இருந்த சினிமா பிரபலங்கள் பலரும் பிரதமர் மோடியை சந்தித்து வணக்கம் வைத்தனர். இதன் காரணமாகவே நேற்று ராதிகா சரத் குமாரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
தமிழ்நாட்டில் அரசின் நிலைப்பாட்டின் படியும், பல்வேறு வரலாற்று ஆய்வாளர்களின் நிலைப்பாட்டின் படியும் தை 1ம் தேதிதான் தமிழ் புத்தாண்டாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதே சமயம் சிலரால் சித்திரை 1ம் தேதியும் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை 1ம் தேதியை முன்னிட்டு தமிழ்நாடு முழுக்க சிலரால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புத்தாண்டை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அதேபோல் தமிழ்நாட்டில் சித்திரை முதல்நாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இப்படிப்பட்ட நிலையில்தான் டெல்லியில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று பாஜக இணை அமைச்சர் எல் முருகன் மூலம் கொண்டாடப்பட்டது. எல் முருகனின் டெல்லி இல்லத்தில் இந்த மாபெரும் கொண்டாட்டம் நிகழ்ந்தது.
இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, உலகின் பழமையான மொழியாக தமிழ் இருந்து வருகிறது. ஒவ்வொரு இந்தியனும் தமிழ் மொழியை நினைத்து பெருமை கொள்கிறோம். தமிழ் புத்தாண்டை கொண்டாடுவது மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சி அளிக்கிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
-
அதிருப்தியில் அண்ணாமலை? தேர்தலில் வாய்ப்பு தராதது ஏன்! பாஜக தலைமை சொன்ன முக்கிய தகவல் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
ஜனநாயகன் படத்தை வெளியிட்ட விஷக்கிருமிகள்.. அடித்து சொன்ன அண்ணாமலை.. சிபிஐ வராங்களாமே -
ஹெலிகாப்டரில் பறந்த அண்ணாமலை.. தரையிறங்கியதும் சுத்துப்போட்ட அதிகாரிகள்! என்ன நடந்தது? பரபரப்பு -
மோடியை கொல்ல சதி.. அலறிய அமெரிக்க CIA.. உடனே இந்தியாவுக்கு பறந்த மெசேஜ்.. 3 பேர் அதிரடியாக கைது -
போய் டவுசரை போட்டு வேலையை பார்க்க சொல்லுங்க.. அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி -
இப்படி பண்ணா போதும்.. வங்கி கணக்கில் பணம் தேடி வரும்.. செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் செம சான்ஸ் -
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
கந்தசாமியா.. பழனிசாமியா.. கன்ஃபியூஷ் ஆன அண்ணாமலை.. ஷாக்கான அதிமுக வேட்பாளர் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி












Click it and Unblock the Notifications