இவங்க எங்க இங்கே.. ராதிகாவை பார்த்ததும் சட்டென வியந்த மோடி.. அந்த சிரிப்பு.. என்ன நடந்தது?
டெல்லி: நேற்று டெல்லியில் நடந்த தமிழ் புத்தாண்டு நிகழ்வில் பிரதமர் மோடி நடிகை ராதிகா சரத் குமாரை நேரில் சந்தித்தார்.
டெல்லியில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று பாஜக இணை அமைச்சர் எல் முருகன் மூலம் கொண்டாடப்பட்டது. எல் முருகனின் டெல்லி இல்லத்தில் இந்த மாபெரும் கொண்டாட்டம் நிகழ்ந்தது.

எல் முருகன் சார்பாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சிறிய அளவிலான கலை நிகழ்ச்சிகள், தமிழ்நாடு கலாச்சாரத்தை பறைசாற்றும் நிகழ்வுகள் இந்த கொண்டாட்டத்தில் நடந்தது. தமிழ்நாட்டை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கூட இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பாஜக எம்எல்ஏக்கள் வானதி சீனிவாசன், சரஸ்வதி, நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதேபோல் பாஜகவின் ஏபி முருகானந்தம் போன்றவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலை இந்த நிகழ்வை புறக்கணித்தார்.
இந்த நிகழ்விற்கு தமிழ்நாட்டை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் சென்று இருந்தனர். பாஜகவுடன் நெருக்கமாக இருப்பவர்கள், நட்பாக இருப்பவர்கள், சினிமா உலக பிரபலங்கள் என்று பலர் சென்று இருந்தனர்.

இந்த நிகழ்வில் ராதிகா சரத் குமாரும் கலந்து கொண்டு இருந்தார். அவர் பிரதமர் மோடி வரும் போது அந்த வரிசையில் நின்று கொண்டு இருந்தார். வரிசையாக பல்வேறு தலைவர்களை பார்த்துக்கொண்டு இருந்த மோடி ராதிகா சரத் குமாரையும் பார்த்தார்.
ஏற்கனவே அவருக்கு ராதிகாவை தெரியும் என்பதால், அவரை பார்த்ததும் மோடி ஒரு புன் சிரிப்பு சிரித்தார்.
பதிலுக்கு ராதிகா சரத்குமாரும் பிரதமர் மோடியை பார்த்து சிரித்து அவருக்கு வணக்கம் வைத்தார். இந்த நிகழ்வு அரசியல் நிகழ்வாக இல்லாமல் கலாச்சார நிகழ்வாக அமைக்கப்பட்டு இருந்தது.
இதனால் அரசியல் கடந்தும் கூட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அங்கே இருந்த சினிமா பிரபலங்கள் பலரும் பிரதமர் மோடியை சந்தித்து வணக்கம் வைத்தனர். இதன் காரணமாகவே நேற்று ராதிகா சரத் குமாரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
தமிழ்நாட்டில் அரசின் நிலைப்பாட்டின் படியும், பல்வேறு வரலாற்று ஆய்வாளர்களின் நிலைப்பாட்டின் படியும் தை 1ம் தேதிதான் தமிழ் புத்தாண்டாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதே சமயம் சிலரால் சித்திரை 1ம் தேதியும் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை 1ம் தேதியை முன்னிட்டு தமிழ்நாடு முழுக்க சிலரால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புத்தாண்டை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அதேபோல் தமிழ்நாட்டில் சித்திரை முதல்நாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இப்படிப்பட்ட நிலையில்தான் டெல்லியில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று பாஜக இணை அமைச்சர் எல் முருகன் மூலம் கொண்டாடப்பட்டது. எல் முருகனின் டெல்லி இல்லத்தில் இந்த மாபெரும் கொண்டாட்டம் நிகழ்ந்தது.
இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, உலகின் பழமையான மொழியாக தமிழ் இருந்து வருகிறது. ஒவ்வொரு இந்தியனும் தமிழ் மொழியை நினைத்து பெருமை கொள்கிறோம். தமிழ் புத்தாண்டை கொண்டாடுவது மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சி அளிக்கிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
-
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications