Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தென்னாப்பிரிக்காவின் டெஸ்ட் வெற்றியை.. சொந்த வெற்றியாக தமிழக மக்கள் கொண்டாடுவது ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நேற்று பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா வென்றது. பைனல் வந்தால் ஆஸ்திரேலியாவை அடிக்கவே முடியாது என்ற சம்பிரதாயத்தை உடைத்து தென்னாபிரிக்கா கோப்பையை வென்றுள்ளது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தென்னாபிரிக்கா வென்றது. உலகம் முழுவதும் பலர் இதைக் கொண்டாடிய அதே வேளையில், தமிழ்நாட்டில் பல தமிழர்கள் தென்னாப்பிரிக்காவின் வெற்றியை தங்களின் சொந்த வெற்றியை போல கொண்டாடினர். இதற்குக் காரணம் கிரிக்கெட்டைத் தாண்டியும் அவர்களுக்குள் இருந்த பிணைப்புதான்.

இரண்டு தேசங்கள், ஒரே போராட்டம்: ஒடுக்குமுறைக்கு எதிரான பிணைப்பு

தமிழர்களுக்கு சாதி பாகுபாடு, நிறவெறி மற்றும் சமத்துவமின்மைக்கு எதிராகப் போராடிய நீண்ட வரலாறு உண்டு. இந்தியாவிலேயே முதல்முறை 69% இடஒதுக்கீட்டை கொண்டு வந்த மாநிலம் தமிழ்நாடுதான். சமூக நீதி திட்டங்களை அறிமுகம் செய்த முதல் மாநிலம் தமிழ்நாடுதான். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டுப் போராடியது, வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்களை மேம்படுத்துவதற்கான ஒரு வலுவான இயக்கமாகும் தமிழ்நாட்டின் அரசியல் இருந்தது. இது கொள்கை மட்டுமல்ல; நீதி மற்றும் கண்ணியம் சம்பந்தப்பட்ட விஷயம். முக்கியமாக தமிழ்நாட்டில் நடந்த சுயமரியாதை போராட்டங்கள்.. பெரியார் தொடங்கி திராவிட கட்சிகள் வரை இதையே முன் வைத்து போராட்டங்களை, சட்டங்களை மேற்கொண்டது.

Australia South Africa

தென்னாப்பிரிக்காவைப் பொறுத்தவரை இதே அரசியலைத்தான் செய்தது. நிறத்தின் அடிப்படையில் மக்கள் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்ட கொடுமையான இனவெறி வரலாறு அந்த நாட்டிற்கு உண்டு. கடுமையான இனவெறியை இருந்து.. கடந்த காலத்திலிருந்து அந்த நாட்டு மக்கள் மீண்டு வந்துள்ளனர். நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப, தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் உட்பட விளையாட்டுகளில் இடஒதுக்கீடு முறையை அறிமுகப்படுத்தியது.

தேசிய அணியில் குறைந்தது 6 வீரர்கள் வெள்ளையர் அல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்பது விதியாக இருந்தது. அதில் 2 கறுப்பினத்தவர் ஆப்ரிக்கர்களாக இருக்க வேண்டும் என்றும் விதி உள்ளது. இது வெறும் எண்ணிக்கையல்ல; இது ஒரு சமூக நீதி திட்டம். பல தசாப்தங்களாக ஒதுக்கி வைக்கப்பட்டவர்களுக்கு இது ஒரு வாய்ப்பை வழங்கியது.

தென்னாப்பிரிக்காவின் கிரிக்கெட் அணி நாட்டின் உண்மையான பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கிறது - வெவ்வேறு இனங்கள், வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்த வீரர்கள் அனைவரும் ஒரே கொடியின் கீழ் ஒன்றுபட்டுள்ளனர். தற்போது அதே தென்னாபிரிக்க அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது அவர்களின் இடஒதுக்கீடு சரியானது என்பதை நிரூபித்துள்ளது.

இடஒதுக்கீடு வெற்றிக்கு காரணமாக இருக்குமே ஒழிய.. வெற்றியை தடுப்பதாக இருக்காது என்பதை நிரூபித்துள்ளது. பிரதிநிதித்துவம் மற்றும் சம வாய்ப்பில் நம்பிக்கை கொண்ட தமிழர்களுக்கு, இந்த வெற்றி சொந்த வெற்றி என்ற உணர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில், இடஒதுக்கீடு பலவீனமல்ல என்பதை அது நிரூபித்தது.

பல தமிழர்களைப் பொறுத்தவரை, இது ஒரு விளையாட்டு வெற்றி மட்டுமல்ல - இது ஒரு தார்மீக வெற்றி. இடஒதுக்கீடு சரியாகச் செய்யப்படும்போது, தரம் குறையாது என்பதற்கு இது ஒரு உலகளாவிய எடுத்துக்காட்டு. இது நம்பிக்கையை அளிக்கிறது. மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்துகிறது. எல்லோருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் போது அது வெற்றிக்கும் வழிவகுக்கும் என்பதை இந்த வெற்றி நிரூபித்துள்ளது.

சமூக நீதிக்கான தமிழ்நாட்டின் போராட்டத்தைப் போலவே, தென்னாப்பிரிக்காவின் கிரிக்கெட் பயணமும் மாற்றம் சாத்தியமானது என்பதற்கான சான்றாகும். இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா கோப்பையை உயர்த்தியபோது, ​​. உலகம் முழுவதும் பலர் இதைக் கொண்டாடினர். அதே வேளையில், தமிழ்நாட்டில் பல தமிழர்கள் தென்னாப்பிரிக்காவின் வெற்றியை தங்களின் சொந்த வெற்றியை போல கொண்டாடினர்.

தென்னாப்பிரிக்காவின் இந்த வெற்றி கிரிக்கெட்டின்வெற்றி. சமத்துவத்திற்கான வெற்றி. அனைவருக்குமான வெற்றி!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+