தனி ஆளாக வென்று கொடுத்த அஸ்வின்.. "அடுத்த போட்டியில் நீக்கப்படுவார்.." சர்ச்சையை கிளப்பிய சசி தரூர்
டெல்லி: வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அட்டகாசமான வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், அஸ்வின் அடுத்த போட்டியில் நீக்கப்படுவார் என்று காங்கிரஸின் சசி தரூர் பதிவிட்டுள்ளது மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
வங்கதேசம் சென்றுள்ள இந்தியா அணி மூன்று ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய வங்கதேசம் இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
அதன் பிறகு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்தியா 188 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. இதையடுத்து 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 22ஆம் தேதி வங்கதேச தலைநகர் டாக்காவில் தொடங்கியது.

வங்கதேசம்
இதில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 227 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக அஷ்வின் 4 விக்கெட்களை எடுத்தார். அடுத்துப் பேட் செய்த இந்தியா 314 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.. அடுத்த இரண்டாவது இன்னிகிஸை தொடங்கிய வங்கதேசம் தொடக்கத்திலேயே மளமளவென விக்கெட்களை இழந்தது. 70 ரன்களை சேர்க்கும் முன்னே டாப் பேட்ஸ்மேன்களை இழந்தது. இருப்பினும், அதன் பிறகு ஒருவாறு சமாளித்து 231 ரன்களை எடுத்தது. இதில் அஸ்வின் இரண்டு விக்கெட்களை எடுத்திருந்தார்.

இந்தியா வெற்றி
அடுத்து 145 ரன்கள் எடுத்தால் என்று களமிறங்கிய இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. 37 ரன்களை எடுப்பதற்குள் 4 விக்கெட்களை இழந்தது. டாப் பேட்ஸ்மேன்கள் அனைவருமே சொதப்பினர். ஒரு கட்டத்தில் 74 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து மோசமான நிலையில், இந்தியா இருந்தது. அப்போது களமிறங்கிய அஸ்வின் நிதனமாக ஆடி ரன்களை குவித்தார். இந்த போட்டியில் ஷ்ரேயஸ் ஐயருடன் இணைந்த அஸ்வின் 62 பந்துகளில் 42 ரன்களை எடுத்துக் கலக்கினார். 2ஆவது இன்னிங்கிஸில் அதிக ரன்களை எடுத்தவர் என்ற பெயரையும் பெற்றார்.

ஒன் மேன் ஆர்மி அஸ்வின்
இதன் மூலம் 36 வயதான அஸ்வின் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்றார். மிகவும் இக்கட்டான சூழலிலும் மிகச் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக் கோட்டிற்கு அழைத்துச் சென்றார் அஸ்வின்! டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு அதிக விக்கெட்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள அஸ்வின் பேட்டிங்கிலும் தன் கில்லி என்பதை அவ்வப்போது நிரூபித்து வருகிறார். குறிப்பாக இன்றைய தினம் அணி இக்கட்டான நிலையில் இருந்த போதிலும், டென்ஷனாகாமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

சசி தரூர்
ஐசிசி டெஸ்ட் ஆல் ரவுன்டர் ரேங்கிங்கில் இப்போது இரண்டாம் இடத்தில் இருக்கும் அஸ்வினுக்கு பேட்டிங்கில் அமைந்த மிகச் சிறப்பான ஒரு நாள் இன்று. இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்த அவரை பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டித் தள்ளி வருகின்றனர். அதன்படி திருவனந்தபுரம் எம்பியும், காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான சசி தரூரும் அஸ்வினை பாராட்டியுள்ளார். அதேநேரம் பலரைப் போலவே மோசமான டீம் செலக்ஷனுக்காக இந்திய அணியை விமர்சிப்பதையும் அவர் மறக்கவில்லை..

நீக்கப்படுவார்
திருவனந்தபுரம் எம்பி சசி தரூர் தனது ட்விட்டரில், "வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கடுமையாகப் போராடிய இந்தியா வெற்றி பெற்றுள்ளது... நீண்ட காயம் மற்றும் தேர்வுக்குழுவின் புறக்கணிப்பு இருந்தபோதிலும், அதையும் தாண்டி அஸ்வின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவரது ஆட்டம் அற்புதமானது. இதனால் எங்கு அவர் அடுத்த போட்டியில் நீக்கப்படுவாரோ என்பதே இப்போது எனக்கு இருக்கும் ஒரே கவலை" என்று ட்வீட் செய்திருந்தார். இந்திய அணியின் டீம் செலக்ஷனை பரவும் விமர்சித்து வரும் நிலையில், சசி தரூர் நக்கலடிக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார்.

என்ன காரணம்
ஏனென்றால், வங்கதேசத்திற்கு எதிரான முதல் போட்டியில் இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றதே குல்தீப் யாதவ்தான். மொத்தம் 8 விக்கெட்களை எடுத்த குல்தீப் யாதவ், பேட்டிங்கிலும் 40 ரன்களை எடுத்திருந்தார். ஆட்ட நாயகன் விருதும் அவருக்குத் தான் கொடுக்கப்பட்டது. இருப்பினும், அவரை திடீரென இரண்டாவது டெஸ்டில் இந்தியா நீக்கியது. இந்திய அணியின் இந்த முடிவைப் பல முன்னாள் வீரர்கள் மிகக் கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா தனது அடுத்த டெஸ்ட் போட்டியில் அடுத்தாண்டு பிப், மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications