2070ம் ஆண்டுக்குள் வாகன புகை இல்லாத நாடாக இந்தியா மாற்றப்படும்- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
மத்திய மாநில அரசுகள் பயன்படுத்தும் பழைய வாகனங்களை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருக்கிறார்.
டெல்லி: வாகன புகை இல்லாத நாடாக 2070 ஆம் ஆண்டுக்குள் இந்தியா உருவாகும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய பட்ஜெட் உரையில் தெரிவித்து இருக்கிறார். மத்திய மாநில அரசுகள் பயன்படுத்தும் பழைய வாகனங்களை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் நேற்று தொடங்குயது. இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.
மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சூழலில், மோடி 2.O அரசின் கடைசி முழு நீள பட்ஜெட் இதுவாகும். எனவே இயல்பாகவே மற்ற பட்ஜெட்டுகளை காட்டிலும் இந்த பட்ஜெட் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது.

பட்ஜெட் தாக்கல்
இந்த நிலையில் இன்று காலை 11 மணி முதல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் 2023 - 2024 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வாசித்து வருகிறார். மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட பயன்கள் குறித்து முதலில் பேசிய அவர், புதிய திட்டங்கள் மற்றும் அதற்கு ஒதுக்கப்படும் நிதியை அறிவித்து வருகிறார்.

அவையில் சிரிப்பலை
இதில் புகை மாசு, வாகனங்கள் குறித்து உரையாற்றிய அவர், பழைய வாகனங்களை மாற்றுவது பற்றி தெரிவித்தார். "வாகனங்களை மாற்றுவது என்பது நாட்டின் முக்கியமான கொள்கை. அதாவது, பழைய அரசியலை மாற்றுவது.." என்று அவர் சொன்னவுடன் அவையில் சிரிப்பலை எழுந்தது.
உடனே நிர்மலா சீதாராமனும் சிரித்துக் கொண்டே, "எனக்கு தெரியும். நன்றி.

பழைய வாகனங்கள்
பழைய மாசை ஏற்படுத்தும் வாகனங்களை மாற்றுவது. இதுவும் சரியாக இருக்கும் அல்லவா. அதிக மாசை ஏற்படுத்தும் பழைய வாகனங்களை மாற்றுவது நாட்டின் பொருளாராத்தை எடுத்துக்கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மத்திய அரசின் பழைய வாகனங்களை அழிப்பதற்கு கடந்த 2021 -22 பட்ஜெட்டில் தேவையான நிதியை ஒதுக்கினோம்.

சிரித்தது ஏன்?
பழைய வாகனங்கள் மற்றும் பழைய ஆம்புலன்ஸுகளை மாற்றுவதில் மாநில அரசுகளும் பங்காற்றின. வரும் 2070 ஆம் ஆண்டுக்குள் வாகன புகை இல்லாத நாடாக இந்தியா உருவாகும்." என்றார். நிதியமைச்சர் பழைய அரசியல் என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டது காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக சாடும் வகையில் இருந்ததாக பலரால் புரிந்துகொள்ளப்பட்டது. இதன் காரணமாகவே அவையில் சிரிப்பலை ஏற்பட்டதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications