மிக மோசமான நிலையில் பிரேசில்,அமெரிக்கா.. 'இது' மட்டுமே ஒரே வழி.. உலக நாடுகள் எடுத்த அதிரடி முடிவு
டெல்லி: அமெரிக்கா மற்றும் பிரேசில் நாட்டில் மட்டும் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகெங்கும் 3,74,118 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12.04 கோடியை கடந்துள்ளது. உலகெங்கும் தற்போது 2,07,48,366 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தென் ஆப்பிரிக்க நாடான பிரேசிலில் கொரோனா பரவல் மிகவும் மோசமடைந்துள்ளது. அங்குக் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 44,120 பேருக்குப் புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல 1,111 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை அங்கு 1,14,83,370 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல 2,78,327 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசில் நாட்டிற்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் அதிகபட்சமாக 41,593 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல அமெரிக்காவில் 631 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை அங்கு 3,00,92,550 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல 5,47,228 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே இந்த இரண்டு நாடுகளில் மட்டும் தினசரி கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. அதேபோல பிரான்ஸ், இத்தாலி மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் கொரோனா தடுப்பூசியே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் ஒரே வழியாகப் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அமெரிக்கா, பிரேசில் மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்தியுளளன. இதற்காக பைசர், மாடர்னா, ஜான்சன் உள்ளிட்ட தடுப்பூசிகளின் அவரசகால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications