எதே மாட்டு கறி இல்லையா? சர்ச்சையில் சிக்கிய திண்டுக்கல் உணவு திருவிழா! பரபரப்பை கிளப்பிய பஞ்சாயத்து!
திண்டுக்கல் : 75வது சுதந்திர தின விழாவை ஒட்டி திண்டுக்கல்லில் நடத்தப்பட்ட உணவுத் திருவிழாவில் மட்டன் பிரியாணி சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்பட்ட நிலையில் மாட்டுக்கறிக்கு தடை விதிக்கப்பட்டதா என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
Recommended Video
இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்து அதனை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடும் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு, ஊர்வலங்கள் என நாடு முழுவதும் களைகட்டி வரும் நிலையில் வீடுதோறும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்தார்.

உணவு திருவிழா
இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மக்களுக்கு ஆரோக்கியமான, பாதுகாப்பான உணவு வகைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திண்டுக்கல் உணவுத்திருவிழா திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை தொடங்கியது.

மட்டன் சிக்கன் பிரியாணி
முன்னதாக காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தில் தொடக்க நிகழ்ச்சியாக உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியில் சுயஉதவிக்குழு பெண்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், பெண்கள், வணிகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து மண்டபத்தில் திண்டுக்கல் உணவுத்திருவிழாவை திண்டுக்கல் மேயர் இளமதி தொடங்கி வைத்தார். அங்கு ஒரு உணவகம் சார்பில் மட்டன், சிக்கன் பிரியாணி வைக்கப்பட்டிருந்தது.

பீஃப் பிரியாணி புறக்கணிப்பு
மேலும் சைவ, அசைவ உணவு அரங்குகள், பிற அரசுத்துறை அரங்குகள், மருத்துவ முகாம்கள் என பல அரங்குகள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்நிலையில் தான் திண்டுக்கல்லில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி கண்காட்சி மற்றும் விற்பனைக்காக வைக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. தனியார் உணவகம் சார்பில் பலவகையான பிரியாணிகள் வழங்கப்பட்ட நிலையில் மாட்டுக்கறி பிரியாணி மட்டும் புறக்கணிக்கப்பட்டது ஏன் எனவும் கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது எந்த பிரியாணிக்கும் தடை விதிக்கவில்லை எனவும் யாரும் மாட்டுக்கறி பிரியாணி விற்பனை செய்ய முன் வரவில்லை என கூறி இருக்கிறார்.

சர்ச்சை
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி தடை செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டங்களையும் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து உணவு திருவிழாக்களில் மாட்டுக் கறி பிரியாணியை தவிர்க்கக்கூடாது என்று தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில் அரசு நிகழ்ச்சியில் மீண்டும் மாட்டுக்கறி பிரியாணி புறக்கணிக்கப்பட்டிருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications