யார் மீதும் நம்பிக்கை இல்லை.. அதான் ஃபாரீன் போனாலும் பொறுப்பை ஒப்படைக்கவில்லை- தினகரன் சாடல்
திண்டுக்கல்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு யார் மீதும் நம்பிக்கை இல்லாததால்தான் வெளிநாடு சென்றுள்ள போதிலும் பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்கவில்லை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
லண்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து திண்டுக்கல்லில் அமமுக பொதுச் செயலாளர் தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொழில் முதலீடுகளை கவர்வதற்காக வெளிநாடு செல்கிறார். பொதுவாக முதல்வர் பொறுப்பில் இருப்போர் அதிக நாட்கள் வெளிநாடு செல்லும் போது தனது பொறுப்புகளை யாரிடமாவது ஒப்படைப்பது வழக்கம்.

தமிழகத்தை விட்டு
ஆனால் எடப்பாடி பழனிச்சாமிக்கோ யார் மீதும் நம்பிக்கை இல்லாததாலும் பயத்தாலும் தனது பொறுப்புகளை ஒப்படைக்காமல் சென்றுள்ளார். தமிழகத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற தொழில் முனைவோர் ஏன் தமிழகத்தை விட்டு வேறு மாநிலத்துக்கு சென்றார்கள்?

ஆட்சி இருப்பதால்
இங்கு கட்டமைப்பு வசதிகள் இல்லாததால்தான் அவர்கள் வேறு மாநிலத்துக்கு சென்றுவிட்டார்கள். முன்னாள் மாநிலங்களவை எம்பி மைத்ரேயன் சொன்னது போல் அதிமுகவில் யாரும் உள்ளத்தால் இணைந்திருக்கவில்லை. ஆட்சி இருப்பதால்தான் கட்சியில் உள்ளனர்.

சசிகலா
ஆட்சி இல்லாவிட்டால் நெல்லிக்காய் மூட்டை போல் சிதறிவிடுவர். நான் பெங்களூரில் சசிகலாவை சந்திக்காமல் திரும்பி வந்ததாக கூறுகின்றனர்.

செப். 5-ஆம் தேதி
கடந்த மாதம் சசிகலாவின் தோழி சந்திரலேகா சந்தித்து வந்ததால் எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஒரு மாதத்தில் 6 பேர் மட்டுமே அவரை சந்திக்க முடியும். செப்டம்பர் 5-ஆம் தேதி அவரை சந்திப்பேன் என்றார் தினகரன்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications