நள்ளிரவில் ஜீப்பில்.... திண்டுக்கல் அமமுக சுரபி ஜோதிமுருகன் மீது பாலியல் புகார்-மாணவிகள் ஆவேச மறியல்
திண்டுக்கல்: திண்டுக்கல் சுரபி நர்சிங் கல்லூரி தாளாளரும் அமமுக மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைத் தலைவருமான சுரபி ஜோதிமுருகன் மீது அவர் நடத்தி வரும் நர்சிங் கல்லூரி மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்து சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்லை சேர்ந்த தொழிலதிபர் ஜோதி முருகன். இவர் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டாரங்களில் சுரபி, கபி, ராமபிரபா உள்ளிட்ட பெயரில் நர்சிங் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளை நடத்தி வருகிறார். வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் கவுரவத் தலைவராகவும் இருக்கிறார்.
வ.உ.சி. நினைவுநாளை குருபூஜை என்ற பெயரில் நடத்தி வருபவர் சுரபி ஜோதி முருகன். வ.உ.சி. நினைவுநாளான நேற்றும் இவரது தலைமையில் 85-வது வ.உ.சி. குருபூஜை நிகழ்ச்சி திண்டுக்கல்லில் நடைபெற்றது.

அமமுக வேட்பாளர்
மேலும் அமமுகவின் மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணித் தலைவராகவும் இருக்கும் சுரபி ஜோதிமுருகன், அக்கட்சியின் திண்டுக்கல் லோக்சபா தொகுதி வேட்பாளராக கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலிலும் போட்டியிட்டவர். அவருக்கு ஆதரவாக திண்டுக்கல்லில் டிடிவி தினகரன் பிரசாரமும் செய்தார்.

மாணவிகள் பாலியல் புகார்- மறியல்
இவரது திண்டுக்கல்லை அடுத்த முத்தனம்பட்டி சுரபி நர்சிங் கல்லூரி மாணவிகள்தான் இன்று திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினர். நர்சிங் கல்லூரி தாளாளரான சுரபி ஜோதிமுருகன், பாலியல் தொல்லை தருவதாக கூறி மாணவிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி மாணவிகளை கலைந்து போகச் செய்தனர்.

நள்ளிரவில் ஜீப்பில் லீலை
தாளாளர் ஜோதி முருகன் இரவு நேரங்களில் மாணவிகளை வெளியே கூட்டிச் செல்வதாகவும் அவரது வாகனத்தில் ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்ட மாணவிகளை அமர வைத்து பல்வேறு விதமான பாலியல் தொந்தரவுகளை கொடுத்து வந்ததாகவும் மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் மாணவிகள் வலியுறுத்தினர். மேலும் தங்களது உயிருக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் மாணவிகள் கண்ணீருடன் ஆவேசமாகவும் கூறினர்.

திண்டுக்கல்லில் பரபரப்பு
திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபரான ஜோதிமுருகன் மீது அவர் நடத்தும் கல்லூரி மாணவிகளே பாலியல் தொல்லை புகார் கூறி மறியலில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழிலதிபரான சுரபி ஜோதிமுருகன், 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களிலும் நடித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஓரமாக கோரஸ் பாடுபவராகவும் வருவார். அந்த போட்டோவை அண்ணாத்த படத்தில் சிறப்புத் தோற்றத்தில் உங்கள் ஜோதிமுருகன் என ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

சினிமா தயாரிப்பாளர் ஜோதிமுருகன்
திண்டுக்கல்லுக்கு வருகை தரும் அத்தனை சினிமா பிரபலங்களையும் சந்தித்து படம் எடுத்துக் கொள்வதுடன் அவரது கல்லூரியை சினிமா ஷூட்டிங்குக்கும் இலவசமாக வழங்குவார். இதனால் அவருக்கும் அந்த படங்களில் ஏதேனும் ஒரு சிறப்பு தோற்றத்தை இயக்குநர்கள் வழங்கிவிடுவர். மேலும் ஒருசில திரைப்படங்களையும் சுரபி முருகன் தயாரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications