காந்தியின் மைத்துனர் போல் பேசுகிறார் ஸ்டாலின்.. திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
செம்பட்டி: மகாத்மா காந்தியின் மைத்துனர் போல் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகிறார் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மக்களவை தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், முதலமைச்சர் மண்புழுவாக இருந்து மக்களுக்கு நன்மை செய்கிறார் என்றார். திமுக தலைவர் ஸ்டாலின் பயிர் கொல்லியாக இருந்து கொண்டிருக்கிறார் என்றும் விமர்சனம் செய்தார்.
ராகுல்காந்தி சொந்த ஊரில் விலைபோகாதவர் என்றும், கேரளாவை நோக்கி ஓடிவருவதாகவும் திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்தார்.
மகன்களுக்காக பாடுபடும் அப்பாக்கள்.. தொகுதிக்குள்ளேயே முடங்கி போன தலைவர்கள்.. இது விசித்திர தேர்தல்
காங்கிரஸ் - திமுக கூட்டணி நாட்டு மக்களுக்கு நல்லது செய்தது போன்ற ஒரு சூழ்நிலையை காட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, திண்டுக்கல்லில் பாமக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு கேட்ட திண்டுக்கல் சீனிவாசன் மாம்பழத்திற்கு பதிலாக ஆப்பிள் சின்னத்தில் வாக்கு கேட்டதால் சலசலப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.