அந்த பயங்கர மர்ம வெடி சப்தம்- தொடர் பீதியில் திண்டுக்கல் மாவட்டம்! யார் எப்ப பதில் சொல்வார்களோ?
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடரும் பயங்கர வெடி சப்தத்தின் பின்னணி என்ன என்பது குறித்து நிர்வாகம் கனத்த மவுனம்.
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் இடைவிடாத தொடர் வெடிசப்தங்கள் பொதுமக்களை பெரும் அச்சத்துக்குள்ளாக்கி இருக்கிறது. பல ஆண்டுகளாக தொடரும் இந்த மர்ம வெடி சப்தம் குறித்து ஒவ்வொருமுறையும் மாவட்ட நிர்வாகம் கனத்த மவுனம் காப்பது புரியாத புதிர் என்பது திண்டுக்கல் மாவட்ட மக்களின் குமுறல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை நண்பகல் சரியாக 12.20 மணி.. அப்படி ஒரு பயங்கர வெடிசப்தம்.. மிதமான நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்குவதைப் போல ஒரு அதிர்வு.. வீட்டை விட்டு பொதுமக்கள் வெளியே அலறி அடித்து ஓடி வருகின்றனர்.. எங்கே இருந்து இந்த சப்தம் வந்தது? என்பது அனைவரும் எழுப்பிக் கொண்டிருந்த கேள்வி. ஒருவருக்கும் விடை தெரியவில்லை.
திண்டுக்கல் மாவட்டம் இன்று அதிகாலை 6 மணி.. டீ கடைகளில் நாளிதழ்களை புரட்டிப் பார்த்துக் கொண்டே இருக்கும் திருவாளர் பொதுஜனங்களுக்கு பேசுபொருளாகவும் இந்த வெடி சப்தம்தான்.. இத்தனை வருஷமாக இப்படி ஒரு சப்தம் கேட்குதே.. ஒருத்தர் கூடவா பதில் சொல்லமாட்டாங்க? என்கிற ஆதங்கம் வெளிப்படுகிறது.
அப்படி என்னதான் திண்டுக்கல்லில் நடக்கிறது? திண்டுக்கல் மாவட்டத்தில் திடீர் திடீரென பயங்கர வெடி சப்தம் நிலத்துக்கு கீழே, வான் பரப்பில் கேட்பது உண்டு. இது ஏதோ ஒரு சுற்றுவட்டாரப் பகுதியில் மட்டுமல்ல.. திண்டுக்கல் மாவட்டத்தின் திண்டுக்கல், வேடசந்தூர், நத்தம், குஜிலியம்பாறை என பல பகுதிகளில் ஒரே நேரத்தில் குலைநடுங்க வைக்கிற பெரும் சப்தமாக இருக்கிறது. இப்படியான சப்தங்களுக்கு என்னதான் காரணம்? எத்தனையோ முறை பத்திரிகைகள் இதுபற்றி செய்தி வெளியிட்டாலும், ஆய்வு செய்கிறோம்.. விசாரணை நடக்கிறது என்பதுதான் திண்டுக்கல் மாவட்டத்தின் பல பத்தாண்டுகால பொத்தாம் பொதுவான பதில்.
திண்டுக்கல் வான்பரப்பில் மிகப் பயங்கர பேரிரைச்சல் கேட்கும்.. அப்போது வீடுகளின் ஜன்னல்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டது போல அதிர்ந்து ஓயும். திண்டுக்கல் வான்பரப்பில் ஜெட் விமானங்கள் பறப்பதாக சொல்லப்படும் அல்லது போர் விமானங்கள் தாழ்வாகப் பறந்தன என அடித்துவிடப்படும். திண்டுக்கல் மாவட்டத்துக்கும் விமானத்துக்கும் தொடர்பே கிடையாது. கோவை சூலூர், தஞ்சாவூரில்தான் விமான படை தளங்கள் உள்ளன. ஆனாலும் போர் விமானங்கள் தாழ்வாகப் பறந்திருக்கலாம் என பொதுமக்கள் சமாதானம் அடைவர்.
அதேபோல பயங்கர வெடிசப்தம் கேட்கும்.. அப்போதும் திண்டுக்கல்- கரூர் மாவட்ட எல்லையான ரெங்கமலை, கருமலை விவகாரம்தான் பேசப்படும். ரெங்கமலை, கருமலைப் பகுதியில் பல ஆண்டுகளாக மத்திய புவியியல் துறையினர் ஏதோ ஒரு மிக முக்கியமான ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். இதனை உறுதி செய்யும் வகையில் குறியீட்டு கற்களையும் ஊன்றி வைத்திருக்கின்றனர். திண்டுக்கல் புறநகரில் மத்திய புவியியல் துறை அதிகாரிகள் முகாமிட்டு நாள்தோறும் ரெங்கமலை, கருமலை பகுதிக்கு சென்று ஆய்வும் நடத்துகின்றனர்.
ஆனால் ரெங்கமலை, கருமலை பகுதிகளில் என்ன ஆய்வு நடக்கிறது என்பது பகிரங்கமாக சொல்லப்படவே இல்லை. நியூட்ரினோ திட்டம் போல ஏதேனும் இப்பகுதியில் செயல்படுடுத்த ஆய்வு நடக்கிறதா? என்பதும் தெரியாத மர்மம். செம்பு, காரீயம், துத்தநாகம் உள்ளிட்ட ஏராளமான தனிமங்கள் இந்த மலைகளில் கொட்டி கிடக்கிறது என்கிறது ஒரு தரப்பு. ரெங்கமலையில் தங்க தாதுபடிமங்கள் இருக்கிறது என்கிறது மற்றொரு தரப்பு. ஆனால் எந்த அரசாங்க தரப்பும் எதனையும் இதுவரை பகிரங்கமாக அறிவித்ததும் இல்லை.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக இந்த பயங்கர சப்தங்கள் தொடர் கதையாகி வருகிறது. திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும் எந்த கருத்தையும் சொல்லாமல் கடந்து போகிறது. திண்டுக்கல் மாவட்ட மக்கள் பிரதிநிதிகளாவது தேர்ந்தெடுத்த பொதுமக்களுக்கு என்னதான் நடக்கிறது என்கிற உண்மையை என்றுதான் சொல்வார்களோ? என்பது எதிர்பார்ப்பு.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications