பறந்த சேர்கள்.. கலவரமான கிரிக்கெட் மைதானம்! ஆப்கான். ரசிகர்கள் எப்போதும் இப்டிதான் - சொயிப் அக்தர்
துபாய்: ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான போட்டியின் முடிவில் இருநாட்டு ரசிகர்களும் மோதலில் ஈடுபட்ட நிலையில், ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மீது பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தர் குற்றம்சாட்டி இருக்கிறார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நம்பிக்கை கொடுத்தது இந்தியா.
2 வது லீக் போட்டியில் குட்டி அணியான ஹாங்காங்கிற்கு எதிராக தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இந்திய அணி வெற்றியை பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.

இந்திய அணி
சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் முன்னேறின. கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இந்தியா. செவ்வாய்கிழமை இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும் இந்தியா அதிர்ச்சித் தோல்வியை தழுவியது.

பாகிஸ்தான் VS ஆப்கானிஸ்தான்
இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதிபெறுவதற்கு நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான போட்டியில் ஆப்கானிஸ்தான் அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.

வீரர்கள் மோதல்
இந்த போட்டியின்போது நெருக்கடியான நேரத்தில் முக்கியமான பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஆசிப் அலியை ஆட்டமிழக்க செய்த ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் ஃபரீத் அஹமத், பேட்ஸ்மேனுக்கு மிக அருகில் சென்று கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த ஆசிப் அலியை ஃபரீத் அஹமதுவை அடிப்பதற்காக பேட்டை சுழற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரசிகர்கள் மோதல்
வீரர்கள் மத்தியில் ஏற்பட்ட இந்த மோதல் ரசிகர்களுக்கும் தொற்றிக் கொண்டது. கடைசி வரை போராடியும் பாகிஸ்தான் வீழ்த்த முடியாததால் அதிர்ச்சியடைந்த ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் ஷார்ஜா மைதானத்தில் இருந்த இருக்கைகள் வீசி எரிந்தனர். அப்போது அங்கிருந்த பாகிஸ்தான் ரசிகர்களுக்கும் ஆப்கான் ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

சொயிப் அக்தர்
இது குறித்து ட்விட்டரில் வீடியோவை பதிவிட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தர், "இதைதான் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் செய்கிறார்கள். கடந்த காலங்களிலும் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் இதுபோல் பலமுறை செய்துள்ளார்கள். இந்த விளையாட்டை நல்ல நோக்கத்துக்காக விளையாட வேண்டும். ஸ்டஃபிக் ஸ்டானிக்சாய், உங்கள் வீரர்களும் ரசிகர்களும் சில விசயங்களை கற்றுக்கொண்டால் மட்டுமே விளையாட்டில் வளர முடியும்." என்று பதிவிட்டு உள்ளார்.
-
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
இந்திய கப்பல்களுக்கு மட்டும் வழிவிடும் ஈரான்.. தமிழகத்திற்கு கிடைத்த மெகா நல்ல செய்தி.. சூப்பர்ல -
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
இந்தியா உட்பட.. உலகம் முழுவதும் x தளம் முடங்கியது! கோடிக்கணக்கான பயனர்கள் தவிப்பு! -
இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட்












Click it and Unblock the Notifications