“அதிசயம்” நடக்கலாம்! ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு “கடைசி சான்ஸ்”! எல்லாம் ஆப்கானிஸ்தான் கையில்
துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான், இலங்கை என அடுத்தடுத்து தோல்வியை தழுவி இருக்கும் இந்திய அணி, தொடரிலிருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படும் நிலையில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்ல ஒரு வாய்ப்பு இருக்கிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நம்பிக்கை கொடுத்தது இந்தியா.
2 வது லீக் போட்டியில் குட்டி அணியான ஹாங்காங்கிற்கு எதிராக தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இந்திய அணி வெற்றியை பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.

பாகிஸ்தானிடம் தோல்வி
சூப்பர் 4 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்று இருக்கின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானை மீண்டும் எதிர்கொண்டது இந்திய அணி. அதில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து அதிர்ச்சி கொடுத்தது இந்தியா.

இலங்கையிடம் தோல்வி
இந்த நிலையில் நேற்று இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடியது. டாஸ் வென்று பந்துவீச்சை இலங்கை அணி தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இலங்கை அணி, இலக்கை கடந்து வெற்றிபெற்றது.

இறுதிப் போட்டி
இந்திய அணி 2 போட்டிகளில் தோல்வியடைந்ததால் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது. சூப்பர் 4 சுற்றில் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். எனவே அடுத்து நடைபெற உள்ள 3 போட்டிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகளை தீர்மாணிக்கும்.

ஆப்கானிஸ்தான் கையில்
குறிப்பாக இந்திய அணி ஆப்கானிஸ்தானையும் இலங்கையையும் நம்பி இருக்கிறது. இன்று நடக்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் அடுத்து நடக்க இருக்கும் இலங்கைக்கு எதிரான போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றிபெற்றால் இந்திய அணியில் தொடரிலிருந்து வெளியேறி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.

கடைசி வாய்ப்பு
இரண்டிலும் பாகிஸ்தான் தோற்றால் பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறும். அடுத்து நடக்கவிருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற வேண்டும். அதுவும் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் சிக்கல் இன்றி உள்ளே செல்லலாம். ஆனால், இதற்கான முடிவு இன்று நடைபெறும் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போட்டியில் தெரிந்துவிடும்.
-
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications