“அதிசயம்” நடக்கலாம்! ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு “கடைசி சான்ஸ்”! எல்லாம் ஆப்கானிஸ்தான் கையில்
துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான், இலங்கை என அடுத்தடுத்து தோல்வியை தழுவி இருக்கும் இந்திய அணி, தொடரிலிருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படும் நிலையில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்ல ஒரு வாய்ப்பு இருக்கிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நம்பிக்கை கொடுத்தது இந்தியா.
2 வது லீக் போட்டியில் குட்டி அணியான ஹாங்காங்கிற்கு எதிராக தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இந்திய அணி வெற்றியை பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.

பாகிஸ்தானிடம் தோல்வி
சூப்பர் 4 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்று இருக்கின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானை மீண்டும் எதிர்கொண்டது இந்திய அணி. அதில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து அதிர்ச்சி கொடுத்தது இந்தியா.

இலங்கையிடம் தோல்வி
இந்த நிலையில் நேற்று இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடியது. டாஸ் வென்று பந்துவீச்சை இலங்கை அணி தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இலங்கை அணி, இலக்கை கடந்து வெற்றிபெற்றது.

இறுதிப் போட்டி
இந்திய அணி 2 போட்டிகளில் தோல்வியடைந்ததால் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது. சூப்பர் 4 சுற்றில் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். எனவே அடுத்து நடைபெற உள்ள 3 போட்டிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகளை தீர்மாணிக்கும்.

ஆப்கானிஸ்தான் கையில்
குறிப்பாக இந்திய அணி ஆப்கானிஸ்தானையும் இலங்கையையும் நம்பி இருக்கிறது. இன்று நடக்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் அடுத்து நடக்க இருக்கும் இலங்கைக்கு எதிரான போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றிபெற்றால் இந்திய அணியில் தொடரிலிருந்து வெளியேறி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.

கடைசி வாய்ப்பு
இரண்டிலும் பாகிஸ்தான் தோற்றால் பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறும். அடுத்து நடக்கவிருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற வேண்டும். அதுவும் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் சிக்கல் இன்றி உள்ளே செல்லலாம். ஆனால், இதற்கான முடிவு இன்று நடைபெறும் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போட்டியில் தெரிந்துவிடும்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications