பெய்ரூட் வெடி விபத்து நடந்த 24 மணி நேரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் மிக பயங்கரமான தீ விபத்து
துபாய்: லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் 750 டன் நைட்ரேட் குண்டுகள் வெடித்து சிதறியதில், அந்த நகரில் மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டது. இந்த சம்பவம் நடந்து ஒரு நாளில் , ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள (யுஏஇ) அஜ்மானில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுளளது
கலீஜ் டைம்ஸ் செய்திகளின் படி, அஜ்மானின் புதிய இண்டஸ்ட்ரியல் பகுதியில் செயல்படும் பழங்கள் மற்றும் காய்கறி சந்தையில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு இயந்திரங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளன. தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனிடையே பாதுகாப்பு காரணங்களுக்காகவும், தீயை கட்டுக்குள் கொண்டுவரவும் அந்த பகுதியில் போக்குத்துதிருப்பி விடப்பட்டுள்ளது.
فرق الدفاع المدني في #عجمان تكافح حريق متطور في السوق الشعبي بمنطقة الصناعية الجديدة#صحيفة_الخليج pic.twitter.com/ZHDF2EgggB
— صحيفة الخليج (@alkhaleej) August 5, 2020
கலீஜ் டைம்ஸ் செய்திகளின் படி, காய்கறி சந்தையில் நேற்று மாலை 6.30மணிக்கு தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. தீ விபத்து எப்படி ஏற்பட்டது. ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த விவரமும் இதுவரை வெளியாகவில்லை.
70 கிமீ வேகத்தில் வீசும் சூறாவளி காற்று.. பேய் மழை.. மும்பை மக்களே வெளியில் போகாதீங்க!