ஈரோடு கிழக்கு.. சீக்ரெட்டாக கொலுசு, குக்கர் விநியோகம்? காரை திருப்பிய பறக்கும் படை! என்னங்க நடக்குது
ஈரோடு கிழக்கில் இன்று காலையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் மக்களுக்கு கொலுசு , குக்கர் விநியோகம் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் பறக்கும்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இன்னொரு பக்கம் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் கே.எஸ் தென்னரசு அங்கு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

சூடுபிடித்துள்ளது
தொடக்கத்தில் சுணக்கமாக இருந்த ஈரோடு தேர்தல் களமும் கடந்த சில நாட்களாக சூடுபிடித்து உள்ளது. ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். இன்னொரு பக்கம் பாஜக தலைவர் அண்ணாமலை சார்பாகவும் இங்கே பிரச்சாரம் செய்யப்பட்டது. நேற்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் காங்கிரஸ் எம்பிக்காக பிரச்சாரம் செய்தார். வரும் நாட்களில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் இங்கே பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் மக்களுக்கு கொலுசு , குக்கர் விநியோகம் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மக்களுக்கு வீடு வீடாக குக்கர் வழங்கப்படுவதாகவும், பெண்களுக்கு பாக்கெட்டுகளில் கொலுசு வழங்கப்படுவதாகவும் புகார் வைக்கப்பட்டது. மக்களுக்கு கொலுசு, குக்கர் விநியோகம் செய்யப்பட்டதாக பறக்கும் படையினருக்கும் புகார் சென்றுள்ளது.

சிந்தா நகர், மாதவ காடு
இதையடுத்து ஈரோடு கிழக்கில் சிந்தா நகர், மாதவ காடு பகுதிகளில் பறக்கும் படையினர் களமிறங்கி சோதனை செய்தனர். ஆனால் குக்கர், கொலுசு எதுவும் அங்கே பறிமுதல் செய்யப்படவில்லை. மற்ற பகுதிகளில் தற்போது பறக்கும் படையினர் சோதனை செய்ய தொடங்கி உள்ளனர். இந்த புகார்களை தொடர்ந்து மத்திய பாதுகாப்பு படையினர் தற்போது இங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். பறக்கும்படையினர் தற்போது இங்கே வார்டு வாரியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

குடோன் சோதனை
அங்கே இருக்கும் குடோன்களிலும் தற்போது பறக்கும் படையினர் சோதனை செய்து வருகின்றனர். பெரிய கடைகளில் டோக்கன் வழங்கப்படுகிறதா என்றும் பறக்கும் படையினர் விசாரணை செய்து வருகின்றனர். வார்டு வாரியாக சாலைகள் அடைக்கப்பட்டு வாகனங்களில் செல்பவர்கள் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இதனால் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியே பதற்றத்துடன் காணப்படுகிறது,












Click it and Unblock the Notifications