தமிழர்களுக்கு துரோகம் செய்பவர்களுக்கு.. இடைத்தேர்தலில் நிச்சயம் தோல்வி கிடைக்கும்.. கனிமொழி பேட்டி!
தமிழர்களுக்கு துரோகம் செய்யக் கூடிய அனைவருக்கும் தேர்தலில் தோல்வி கிடைக்கும் என கனிமொழி கூறியுள்ளார்.
ஈரோடு: தமிழ்நாட்டிற்கு எதிராக இருப்பவர்களுக்கும், தமிழர்களுக்கு துரோகம் செய்யக்கூடிய அத்தனை பேருக்கும் இந்தத் இடைத்தேர்தலில் தோல்வி கிடைக்கும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். அதேபோல் தமிழ்நாட்டை வடக்கில் இருக்கும் மாற்று சக்திகளுக்கு அடகு வைக்கக் கூடியவர்களுக்கு இடமளித்து விடக்கூடாது என்பதில் மக்கள் மிகத் தெளிவாக உள்ளதாகவும் கனிமொழி கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளராக கேஎஸ் தென்னரசு, தேமுதிக வேட்பாளராக ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மேனகா போட்டியிடுகிறார். இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர்கள், எம்பி-க்கள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு வந்த கனிமொழி
ஏற்கனவே அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, முத்துச்சாமி, கே.என்.நேரு, செஞ்சி மஸ்தான், தங்கம் தென்னரசு உள்ளிட்ட ஏராளமானோர் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். தெருத் தெருவாக சென்று திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான கனிமொழியும் பிரச்சாரத்தில் ஈடுபட ஈரோடு வந்தார்.

கனிமொழி பேட்டி
தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் கனிமொழி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கனிமொழி கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட 39வது வார்டில் மாற்றுக் கட்சியில் இருந்து 214 பேர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்தத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றாகும்.

வடக்கில் உள்ள சக்திகள்
மிகப்பெரிய ஒரு வெற்றியை உருவாக்க வேண்டும் என்பதுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அன்பு கட்டளை. நிச்சயமாக அதுவும் நடக்கும் என்பது மக்களைக் காணும்போது தெரிகிறது. தொடர்ந்து தங்களுக்குள் பல குழப்பங்கள் உள்ள யாருக்குமோ, தமிழ்நாட்டை வடக்கில் இருக்கும் மாற்று சக்திகளுக்கு அடகு வைக்கக் கூடியவர்களுக்கு இடமளித்து விடக்கூடாது என்பதில் மக்கள் மிகத் தெளிவாக உள்ளார்கள்.

தமிழர்களுக்கு துரோகம்
தொடர்ந்து தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக பாடுபடக்கூடிய, குரல் கொடுக்கக்கூடிய திமுக ஆதரவைப் பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் வெற்றி மிகப் பெரிய, சிறப்பான வெற்றியாக இருக்கும். தமிழ்நாட்டிற்கு எதிராக இருப்பவர்களுக்கும், தமிழர்களுக்கு துரோகம் செய்யக்கூடிய அத்தனை பேருக்கும் இந்தத் தேர்தலில் தோல்வி கிடைக்கும் என்று தெரிவித்தார்.
-
எடப்பாடி ரொம்ப டென்ஷன் ஆகுறாரு.. இனி கெட்டவார்த்தையில் பேசுவார் போல! கலாய்த்த உதயநிதி -
'இல்லத்தரசி' கூப்பன்.. ரெடியாகும் QR கோடு அஸ்திரம்.. ஸ்டாலின் கையில் எடுக்கும்.. பிரம்மாண்ட பிளான்! -
11% வாக்கு வித்தியாசம்.. திமுக 200+ கண்டிப்பாக வரும்! சர்வே சொல்லும் ரகசிய தகவல்.. கவனிச்சீங்களா! -
பைசா செலவில்லை.. வெறும் ஏஐ வீடியோக்கள் - சொகுசாகப் பரப்புரை செய்யும் காங்கிரஸ் -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
புதுமைப் பெண் திட்டம்! ரூ.1000 லிருந்து ரூ.1500 உயர்த்த திமுக வாக்குறுதி! இப்படி ஒரு சூப்பர் காரணம்? -
திமுக கொடுத்த சின்ன தோசை.. அப்செட்டில் ராகுல் காந்தி? பிரவீன் சக்கரவர்த்தி இப்படியெல்லாம் பேசறாரே -
12 நாட்களே மிச்சம்! ராகுல் காந்தி தமிழகத்தை புறக்கணிக்க காரணம் இதுதானா? -
திமுகவில் எந்த சமூகத்தவருக்கு அதிக சீட்? வன்னியர், கவுண்டர்களுக்கு முன்னுரிமை? இதோ முழு லிஸ்ட்! -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி












Click it and Unblock the Notifications