அண்ணாமலை மட்டுமல்ல.. எந்த மலையை பற்றியும் கவலையில்லை.. ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சு!
அண்ணாமலை பற்றி கவலையில்லை என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
ஈரோடு: அண்ணாமலையை மட்டுமல்ல, தனக்கு எந்த மலையை பற்றியும் கவலை இல்லை என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் மக்கள் முன் நிற்பதாக கூறிய ஈவிகேஎஸ் இளங்கோவன், புகழ் என்ற செல்வத்தை சம்பாதிக்க வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தின் அனல் ஒவ்வொரு நாளும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவி வரும் சூழலில், மொத்தமாக 77 பேர் போட்டியிடுகின்றனர்.
திமுக கூட்டணி தரப்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஏராளமானோர் தெரு தெருவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் பிரச்சாரம்
இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்குகள் கேட்டு ஈரோடு கிழக்கு 34வது வார்டு உட்பட்ட என்ஜிஜிஓ காலனியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் திறந்தவெளி பிரச்சார வாகனத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

கடைசி கட்டம்
இந்த பிரச்சாரத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசுகையில், வாழ்க்கையின் பல கட்டங்களை கடந்து வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இங்கு வந்து நிற்கிறேன். இந்த மக்களுக்கு நல்ல பல திட்டங்களை செய்து நான் இந்த திட்டத்தை செய்தேன் என்று தாய்மார்களும் மக்களும் சொல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம். அதனால் நான் மக்கள் பணி செய்ய வாய்ப்பு தர வேண்டும். நீங்கள் கை காட்டும் போது கை ஓங்கும், பெண்கள் புன்முறுவலோடு மகிழ்ச்சியோடு இருப்பதை பார்த்து மனநிறைவாக உள்ளது.

கவலையில்லை
என்னுடைய தாத்தா பெரியார் மீது பாசம் வைத்துள்ளீர்கள். வீட்டுக்கு வீடு குடிநீர் குழாய் போடும் திட்டம் முதலில் ஈரோட்டில் தான் போடப்பட்டது. தந்தைக்கு மகன் என்று சொல்லும் பெயரை மகனின் தந்தை இவர் என்ற பெயரை திருமகன் ஈவெரா வாங்கி கொடுத்து சென்றுள்ளார். சிலர் அண்ணாமலையை பற்றி சொல்கிறார்கள் எனக்கு எந்த மலையை பற்றியும் கவலை இல்லை.

ஈரோட்டிலேயே இருப்பேன்
சிலர் வெற்றி பெற்றுவிட்டால் சென்னைக்கு சென்று விடுவேன் என்று கூறுகின்றனர். சென்னைக்கு சென்றால்தான் காரியங்களை செய்ய முடியும் திட்டங்களை நிறைவேற்ற முடியும், முதலமைச்சரை சந்திக்க முடியும், நான் இங்கே தான் இருப்பேன், இங்கே தான் மடிவேன். பேசுவதற்கேன்றே சிலர் இருக்கின்றனர், அவர்கள் காரியங்களை செய்யமாட்டார்கள். எனக்கு தேவைகள் கிடையாது, எங்களுக்கு பூர்விக சொத்து உள்ளது.

புகழ் சம்பாதிக்க வேண்டும்
அந்த சொத்தே எனக்கு போதும். புகழ் என்ற செல்வத்தை தான் நான் சம்பாதிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மு.க.ஸ்டாலின் முதல்வராக இருக்கும் போது மக்களுக்கு பணி செய்ய ஆவலுடன் இருக்கிறேன். ராகுல்காந்தி கட்டளையின் முன்பு நான் நிற்கிறேன், அதனால் எனக்கு ஒரு வாய்ப்பு அளிக்க கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
-
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்! -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
லட்சிய ஜனநாயக கட்சிக்கு தர்பூசணி சின்னம்.. NDA கூட்டணியில் இடம்பெறுமா? இல்லையா? -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்? -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications