Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சத்தியமங்கலத்தில் கேட்கும் அழுகுரல்.. குட்டியின் 2 மாத பாசப் போராட்டம் போச்சே! உயிரிழந்தது தாய் யானை

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்த நிலையில் அந்த யானை தற்போது இறந்து விட்டது. இது வனத்துறையினருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் புலி, யானை. சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. சத்தியமங்கலம் வனச்சரகம், பண்ணாரி கோயில் அருகே நேற்று முன் தினம் இரவு குட்டி யானையுடன் தாய் யானை ஒன்று வந்தது.

Mother Elephant fought till its last breath

அந்த தாய் யானைக்கு உடல்நலம் சரியில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள வனத்திலேயே மயங்கி விழுந்தது. இதை பார்த்த பிறந்து 60 நாட்களே ஆன குட்டி யானை, தாய் யானையை சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது.

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் அங்கு வந்தனர். அது போல் கால்நடை மருத்துவ குழுவினரும் அந்த யானைக்கு சிகிச்சை அளித்தனர். 40 வயதாகும் அந்த யானைக்கு வயது மூப்பால் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அதற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனாலும் அந்த யானையால் எழுந்து கூட நிற்க முடியவில்லை. தாய்க்கு சிகிச்சை அளித்த போது குட்டி யானை பிளிறியபடி சுற்றி வந்தது காண்போரை கலங்கச் செய்தது. பண்ணாரி சாலையின் அருகே இந்த சம்பவம் நடந்த நிலையில் குட்டி யானை சாலை பகுதிக்குச் சென்று வாகனத்தில் அடிபட்டுவிடக் கூடாது என்பதற்காக வனத்துறையினர் 5 அடி ஆழத்தில் குழிதோண்டி அந்த குட்டி யானையை இறக்கி பாதுகாத்து வந்தனர்.

Mother Elephant fought till its last breath

அது போல் தாய்க்கு சிகிச்சை அளித்து கொண்டே குட்டி யானைக்கு பால், நீர் ஆகியவற்றை வனத்துறையினர் வழங்கி வனஅதனர். இஅந்த நிலையில் தன்னை தாயுடன் இருக்க விடாமல் குழியில் வைத்துள்ளார்களே என அந்த குட்டி யானை பாச போராட்டம் நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் அந்த தாய் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதுகுறித்து தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு கூறுகையில் தாய் யானை இறந்துவிட்டது. அனுபவம் வாய்ந்த 4 கால்நடை மருத்துவர்கள் அந்த யானைக்கு சிகிச்சை அளித்தனர். அதன் உயிரை காக்க அத்தனை முயற்சிகள் எடுத்தும் கடைசியில் அது பலனளிக்கவில்லை.

எங்கள் மனம் வேதனையடைந்துள்ளது. ஆனால் அந்த 60 நாட்களேயான குட்டியுடன் அந்த தாய் யானை ஏதோ அதிசயத்தை நடத்தியிருந்துள்ளது. அதனால்தான் அந்த குட்டி, தாயையே சுற்றி சுற்றி வந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+