Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லாம் ஓவர்.. இனி ஓபிஎஸ் பெட்டிஷன் கூட போட முடியாதாம்.. இத கவனிச்சீங்களா? ‘மாஜி’ சொன்ன மேட்டர்!

ஓபிஎஸ் அணியினர் 2 வாய்ப்புகளை நம்பி இருக்கும் சூழலில், அதற்கு இனி வேலையே இல்லை என்று கட் அண்ட் ரைட்டாக கூறியுள்ளார் விஜயபாஸ்கர்.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு : கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் சிவில் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் பெட்டிஷன் போட முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பின் அடிப்படையில், ஓபிஎஸ் நீக்கமும் செல்லும் எனவே, அவர் கட்சியிலேயே இல்லை என்பதால் வழக்கு தொடர முடியாது எனக் கூறியுள்ளார் விஜயபாஸ்கர்.

அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் அதிமுக எடப்பாடி பழனிசாமி வசமாகியுள்ளது. இதையடுத்து, அடுத்த கட்ட நகர்வு குறித்து ஓ.பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

சிவில் வழக்கு

சிவில் வழக்கு

அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பில் ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்று உத்தரவிட்டதோடு, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, சிவில் நீதிமன்றத்தில் வழக்கை நடத்தலாம் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதோடு, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தேர்தல் ஆணையத்திலும் முறையிடலாம் என்று கூறியிருக்கிறது. தற்போதைய நிலையில், உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சிவில் வழக்கையே தங்களது கடைசி ஆயுதமாக நம்பி இருக்கிறது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு.

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்


ஏற்கனவே சிவில் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் விதிமுறைப்படி உருவாக்கப்பட்டுள்ளது. அதை மீறி எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவை கூட்டுகிறார். அது விதிமுறைகளுக்கு எதிரானது என்று வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. சிவில் கோர்ட்டில் தொடரப்பட்ட பிரதான வழக்கில் இன்னும் தீர்ப்பு வரவில்லை. எனவே, அந்த வழக்கின் முடிவை ஓ.பன்னீர்செல்வம் எதிர்பார்க்கிறார். அடுத்ததாக தேர்தல் ஆணையத்தையும் அணுக முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது.

முற்றுப்புள்ளி

முற்றுப்புள்ளி

இந்நிலையில், கட்சியில் உறுப்பினர்கள் இல்லாத யாருமே சிவில் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் பெட்டிஷன் போட முடியாது என அதிமுக ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஈரோடு மாநகர் அதிமுக அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், "இனி அணியும் இல்லை, பிளவும் இல்லை, பிரிவும் இல்லை. இந்த டீம் அந்த டீம் என்பதும் இல்லை. அனைத்து கேள்விகளுக்கும் உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதிமுக மற்றும் இரட்டை இலை என்பது எம்ஜிஆர், ஜெயலலிதா அதற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி என்ற வரிசையை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ளது.

பெட்டிஷனே போட முடியாது

பெட்டிஷனே போட முடியாது

உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெள்ளத் தெளிவாக‌ பொதுக்குழு செல்லும் என்று தெரிவித்துள்ளது. அப்படி இருக்கையில் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் செல்லும். அன்றைய தினம், நீக்கப்பட்டவர்கள் யாருக்கும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் என்ற உரிமை கூட கிடையாது. கட்சியில் உறுப்பினர்கள் இல்லாத யாருமே சிவில் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் பெட்டிஷன் போட முடியாது. இந்த புரிதல் அனைவருக்குமே இருக்கின்றது. இனி அது ஒரு இறந்த காலம்." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+