பெரியார் படத்தில் “காவி” சாயம்.. அதுவும் அவர் ஊரில்! “ஆக்ஷன்” எடுங்க - திமுக புகார்
ஈரோடு: சத்தியமங்கலத்தில் தந்தை பெரியார் புகைப்படம் கொண்ட சுவரொட்டியின் மீது காவிச்சாயம் பூசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இந்த செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுகவினர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
திராவிடர் கழக நிறுவனரும், சமூக நீதி போராளியுமான தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் கடந்த 17 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பலரும் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவுகூர்ந்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்பேற்ற திமுக, தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் தேதி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.

சத்தியமங்கலம்
அந்த வகையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் விடுதலை கழகம் சார்பில் பல்வேறு இடங்களில் பெரியார் படத்துடன் கூடிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. இந்த நிலையில் சுவரொட்டியில் உள்ள பெரியார் படத்தின் மீது மர்ம நபர்கள் காவி சாயம் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பேருந்து நிலையம்
சத்தியமங்கலம் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள ஆவின் பால் நிலையத்தின் பக்கவாட்டு சுவற்றில் "சனாதனத்தை வேரறுக்க உறுதி ஏற்போம்" என்ற வாசகத்துடன் ஒட்டப்பட்டு இருந்த 3 சுவரொட்டிகளில் இருந்த பெரியார் படத்தின் மீது காவி சாயம் பூசப்பட்டிருந்தது. இதனை கண்டு திராவிட இயக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

திமுக புகார்
இதைத் தொடர்ந்து சத்தியமங்கலம் நகர செயலாளரும், நகராட்சி தலைவருமான ஆர். ஜானகிராமசாமி தலைமையில் பெரியார் சுவரொட்டி மீது காவி சாயம் பூசிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் திமுகவினர் புகார் அளித்தனர்.

போலீசார் விசாரணை
சுவரொட்டியில் உள்ள பெரியாரின் புகைப்படத்தின் மீது காவி சாயத்தை ஊற்றி மத மோதலை தூண்டும் வகையில் இச்செயலில் ஈடுபட்ட மர்மநபர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். அதன் பேரில் போலீசார் காவிச் சாயம் ஊற்றியவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சத்தியமங்கலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications