விஜய் முதலமைச்சர் ஆக வேண்டி.. பால்குடம் எடுத்த தவெக பெண்கள்.. திரும்பிப் பார்த்த ஈரோடு!
ஈரோடு: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக ஈரோட்டில் தவெகவை சேர்ந்த பெண்கள் 150 பால்குடங்கள் எடுத்து பேரணியாக வந்து மாகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் தேர்தல் களத்தில் அனல் பறந்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது திமுக கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவி வருகிறது.

முதல் முறையாக தேர்தல் களம் காணும் விஜய்யின் தவெக, கூட்டணிக்கு அழைப்பு விடுத்தது. தங்களுடன் கூட்டணிக்கு வந்தால் ஆட்சியில் பங்கு தருவோம் என ஆஃபர் கொடுத்தது. ஆனால், எந்தவொரு கட்சியும் தவெக உடன் கூட்டணிக்கு செல்லவில்லை. இதனால் தற்போது வரை தவெக தனித்தே நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழக முதல்வராக வேண்டுமென அவர்களது கட்சி நிர்வாகிகள் ஒன்றிணைந்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் அம்மனுக்கு பால்குடம் எடுத்து அபிஷேகம் செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாகாலி அம்மன் கோவிலில் உள்ள அம்மனுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழக முதல்வராக வேண்டும் என சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் 150 பால்குடங்களை எடுத்து பேரணியாக வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.
மேலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தி நடைபெறவிருக்கும் 2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதல்வராக வேண்டுமென வேண்டி வருகின்றனர். இந்த நிகழ்வில் தமிழக வெற்றி கழகத்தின் ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் விஜய் பாலாஜி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications