இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள 12 வயது சிறுவன் உயிர் பிழைக்க உதவுங்கள் ப்ளீஸ்!
சென்னை: ட்ரெச்சர் கோலின்ஸ் (treacher collins syndrome) என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள 6 மாத குழந்தையின் உயிரை காப்பாற்ற உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.
தமிழகத்தின் கோவையை சேர்ந்த ஹரிஹரன் மற்றும் செல்வி ஆகியோருக்கு கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த 6 மாதத்தில் குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. குழந்தை மூச்சுவிட சிரமப்பட்டுள்ளான்.

இதையடுத்து மருத்துவனைக்கு கொண்டு சென்று பார்த்த போது, அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. ஏற்கனவே குநதையின் சகோதரனும் இதே போன்று பாதிக்கப்பட்டுள்ளார். குழந்தையை காப்பாற்ற ஏராளமான பணம் செலவாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் . ஆனால் சிறிய ஈவன்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஹரிகரனால் குழந்தைகள் சிகிச்சை செலவுகளை நிர்வகிக்க முடியாமலும் குடும்பத்தை நிர்வகிக்க முடியாமலும் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

இதனிடையே ஹரிகரன் வேலை பார்த்த ஈவன்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் கொரோனா லாக்டவுன் காரணமாக மூடப்பட்டது. இப்போது வேலை இழந்ததால் குடும்பம நடத்த முடியாமல், குழந்தையின் சிகிச்சைக்கு பணத்தை திரட்ட முடியாமல் தவித்து வருகிறார். குடும்பத்தை நிர்வகிக்க ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 10000 முதல் 15000 வரை தேவைப்படுகிறது.

குழந்தை Treacher collins எனப்படும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. மூச்சுவிட முடியாமல் தவித்து வருகிறது, குழந்தையை காப்பாற்ற உங்களால் ஆன உதவியை செய்யுங்கள்.












Click it and Unblock the Notifications