சிக்கன் பிரியாணியில் புழு.. பிரியாணி கடையில் புகார் அளித்த வாடிக்கையாளருக்கு மேலும் அதிர்ச்சி
ஒசூர்: ஒசூர் அருகே பிரியாணி ஓட்டலில் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தவர்களுக்கு புழு பிரியாணி வந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Recommended Video
பிரியாணிக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை. சைவ பிரியர்களாக இருந்தால் வெஜிடபிள் பிரியாணி, மஸ்ரூம் பிரியாணி, பன்னீர் பிரியாணி உள்ளிட்டவைகளை விரும்புவர்.
அது போல் அசைவ பிரியர்கள் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, மீன் பிரியாணி, பீப் பிரியாணி, இறால் பிரியாணி ஆகியவை அவர்களுக்கு பிடிக்கும். அந்த அளவுக்கு காது குத்து, பிறந்தநாள், திருமணம், திருமண நாள் உள்ளிட்ட விசேஷங்களுக்கு பிரியாணிதான் ஃபேமஸ்.

ஒசூர்
அந்த வகையில் கிருஷ்ணகிரி - ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் சின்னார் எனுமிடத்தில் அமைந்துள்ளது ஒரு அசைவ ஹோட்டல். பிரபலமான இந்த ஹோட்டலில் தினந்தோறும் பல்வேறு தரப்பு மக்கள் என 800 முதல் 1000 பேர் வரை சாப்பிட்டு செல்லும் பிசியானது இந்த ஹோட்டல்.

நண்பர்கள் 5 பேர்
காவேரிப்பட்டிணத்தை அடுத்த சப்பாணிபட்டி பகுதியை சேர்ந்த நண்பர்களான மூர்த்தி, அருண், ராமச்சந்திரன், அருள் ஆகிய 5 பேர் சின்னார், அந்த பிரியாணி ஹோட்டலில் 4 சிக்கன் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளனர். சிக்கன் பிரியாணி வந்ததும் அதில் பெரிய அளவிலான புழு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் நிர்வாகத்திடம் முறையிட்டனர்.

அலட்சியம்
கத்தரிக்காயிலிருந்து புழு வந்திருக்கலாம் என அலட்சியமாக கூறி உள்ளனர். கோபமடைந்த இவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது பெங்களூருவில் உள்ள மேலாளருக்கு ஹோட்டல் ஊழியர்கள் போன் செய்து கொடுக்க எதிர் திசையில் பேசிய மேனேஜர், பிரியாணியில் புழு இருந்ததெல்லாம் ஒரு புகாரா சாப்பிட்டு போகுமாறு அறிவுறுத்தியதாக தெரிகிறது.

ஹோட்டலில் சாப்பிட்ட நண்பர்கள்
இது குறித்து ஹோட்டலில் சாப்பிட்ட நண்பர்கள் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில்: பிரபலமான ஹோட்டல் என்பதால் பலரும் நம்பி சாப்பிடக் கூடிய இந்த ஹோட்டலில் இதுப்போன்ற சம்பவங்களின் போது கூட திருத்திக் கொள்ள முயற்சிக்காமல் அலட்சியம் காட்டும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications