10,000 ஏக்கரில் கஞ்சா தோட்டம்.. ஆந்திராவை உலுக்கிய கேங்.. டிரோன் மூலம் கண்டுபிடித்த அதிரடி படை!
ஆந்திராவில் செயல்பட்டு வரும் கஞ்சா தயாரிப்பு பகுதிகளை எல்லாம் மொத்தமாக அழிக்க அம்மாநில அரசு முடிவெடுத்து இருக்கிறது.
Recommended Video

ஹைதராபாத்: ஆந்திராவில் செயல்பட்டு வரும் கஞ்சா தயாரிப்பு பகுதிகளை எல்லாம் மொத்தமாக அழிக்க அம்மாநில அரசு முடிவெடுத்து இருக்கிறது.
தென்னிந்தியாவில் இப்போதெல்லாம் கஞ்சா புழக்கம் அதிகமாகிவிட்டது. நீங்கள் கேள்விப்பட்டதை வைத்து, கேரளாவில்தான் கஞ்சா உற்பத்தி அதிகமாக இருக்கிறது என்று நினைத்தால் அது தவறான விஷயம். இந்தியாவிலேயே ஆந்திராவில்தான் அதிக அளவில் கஞ்சா உற்பத்தி செய்யப்படுகிறது.
அதுவும் விசாகப்பட்டினத்தில்தான் அதிக அளவில் கஞ்சா உற்பத்தி செய்யப்படுகிறது. அங்குள்ள படேறு பகுதியை இந்தியாவின் கஞ்சா தலைநகர் என்று அழைக்கிறார்கள்.

எங்கு எல்லாம்
விசாகப்பட்டினம் அருகே இருக்கும் பகுதிகளான படேறு, ஹகும்பேட்டா, மான்சிகிபட்டு, மண்டல்லோ ஆகிய பகுதிகள்தான் அதிக அளவில் கஞ்சாவை பயிரிடுகிறது. இங்கு 1000 கிராமங்களில் கஞ்சா பயிரிடப்படுகிறது. ஒரு கிராமத்தில் இருந்து மட்டும் குறைந்தது 1000 கிலோ கஞ்சா உற்பத்தி செய்யப்படுகிறது. பல்லாயிரம் கோடி வருமானம் இதன் மூலம் கிடைப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

தனிப்படை அமைத்தது
ஆனால் எங்கு, எப்படி உற்பத்தி செய்கிறார்கள் என்று விவரம் தெரியாமல் இருந்தது. ஒரு பெரிய கேங்தான் இந்த போதை வியாபார உலகத்தை கட்டுப்படுத்துகிறது என்று போதை தடுப்பு பிரிவிற்கும் தகவல் வந்துள்ளது. இதையடுத்து கடந்த இரண்டு மாதம் முன் இதை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

புதியது கண்டுபிடிக்கப்பட்டது
இந்த தனிப்படை தற்போது 5000 ஏக்கர் கஞ்சா தோட்டத்தை படேறு கிராமம் அருகே கண்டுபிடித்துள்ளது. இன்னும் 5000 ஏக்கர் எங்கே இருக்கிறது என்றும் தெரியும் என்று கூறியுள்ளது. குட்டி டிரோன் விமானங்கள் மூலம் இந்த கஞ்சா தோட்டங்களை கண்டுபிடித்து இருக்கிறார்கள். இதன் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

இந்த மாதம் வளரும்
இந்த கஞ்சா எல்லாம் செப்டம்பர் இறுதியில் இருந்து ஜனவரி வரை வளரும். இதனால் இந்த நேரத்தில் சோதனை செய்தால்தான் சரியாக இருக்கும் என்று இப்போது சோதனை செய்துள்ளனர். இங்கு இருந்துதான் உலகின் பல பகுதிகளுக்கு கஞ்சா கடத்தப்படுகிறது.

அழிக்கிறார்கள்
அடையாளம் காணப்பட்டுள்ள கஞ்சா தோட்டங்களை அழிக்க முடிவு செய்து இருக்கிறார்கள். போலீசார், வனத்துறையினர் இதை விரைவில் அழிக்க ஏற்பாடு செய்து வருகிறார்கள். இது கஞ்சா மார்க்கெட்டை மொத்தமாக காலி செய்யும் என்றும் கூறுகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications