‛‛இதுதான் அரசியலா?’’.. ரசிகர்களால் வசமாய் சிக்கிய நடிகர் அல்லு அர்ஜுன்.. பாய்ந்தது வழக்கு
அமராவதி: ஆந்திரா சட்டசபை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவை சந்திக்க சென்ற நடிகர் அல்லு அர்ஜுனை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்த நிலையில் தற்போது அவர் சிக்கலில் சிக்கி உள்ளார். மேலும் அல்லு அர்ஜுன் மீது போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். ஆந்திரா சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் வரும் ஜுன் 11ம் தேதி முடிவடைய உள்ள நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் ஆந்திராவில் சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல் ஆகியவை ஒன்றாக நடைபெற உள்ளது. நாளை ஒரேகட்டமாக ஆந்திராவில் லோக்சபா, சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. ஆந்திராவில் மொத்தம் 25 லோக்சபா தொகுதிகள் உள்ளன.
மேலும் ஆந்திராவை பொறுத்தவரை மொத்தம் 175 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 88 இடங்களில் வெல்ல வேண்டும். ஆந்திராவில் மும்முனை போட்டி உள்ளது. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி, இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. மாறாக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாஜக மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து களமிறங்கி உள்ளது.
ஆந்திராவில் ட்விஸ்ட்.. மகள் ஷர்மிளாவுக்காக காங்., ஆதரவு.. முதல்வர் ஜெகன்மோகனை கைவிட்ட தாய் விஜயம்மா
ஆந்திராவில் நேற்று பிரசாரம் முடிவடைந்தது. இதற்கிடையே நேற்று தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நாந்தியால் சட்டசபை தொகுதி சிட்டிங் எம்எல்ஏ ஷில்பா ரவி ரெட்டியை சந்தித்தார். இவர் மீண்டும் அந்த தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். நண்பர் என்பதால் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க சென்றார்.
‛புஷ்பா.. புஷ்பராஜ்’.. ஆந்திரா தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு? நடிகர் அல்லு அர்ஜுன் தந்த ‛நச்’ பதில்
இந்த வேளையில் அல்லு அர்ஜுனை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதையடுத்து வீட்டு பால்கனியில் நின்றபடி அல்லு அர்ஜுன் ரசிகர்களை பார்த்து கையசைத்தார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் ஷில்பா ரவி ரெட்டியின் கையை உயர்த்தி காண்பித்தார். ஒரே நேரத்தில் அதிகமானவர்கள் அங்கு கூடியதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் தான் அல்லு அர்ஜுன் தேர்தல் விதிகளை மீறியதாக புகார்கள் கிளம்பின.
இதுதொடர்பான புகாரில் ஒரே நேரத்தில் எந்த அனுமதியும் இன்றி ஏராளமானவர்களை கூட்டம் சேர்த்ததாக கூறி நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ஷில்பா ரவி ரெட்டி ஆகியோர் மீது தேர்தல் விதிமீறல் தொடர்பான வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
சென்னையில் 13 தொகுதிகளில் 'திமுக' வெல்லும் ! - வாயை விட்ட ஆதவ் அர்ஜூனா! என்னங்க நடக்குது? -
தேர்தல் பரப்புரையில்.. துரந்தர், கேரளா ஸ்டோரி, காஷ்மீர் ஃபைல்ஸ் பற்றி பேசிய மோடி! கேரளாவில் சலசலப்பு -
அவசரமாக திரும்பி வந்த அண்ணாமலை.. சென்னையில் மோடி.. இன்று பாஜகவின் கடைசி நேர ஆபரேஷன்.. யாரந்த 16 பேர் -
திருமாவளவனை மீறி.. ஆளூர் ஷாநவாஸ் திமுகவுடன் நெருக்கம்.. "ஒன்இந்தியாவிடம்" குமுறிய சங்கத்தமிழன்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
வேல்முருகனுக்கு ஷாக்! கேபி முனுசாமி முன்னிலையில் அதிமுகவுக்கு ‘டைவ்’ அடித்த தவாகா வேட்பாளர்! -
மேட்டுப்பாளையம் திமுக வேட்பாளர் மீது அதிருப்தி.. சுயேச்சையாக போட்டியிடும் முக்கிய நிர்வாகி -
"அண்ணாமலை சட்டசபைக்குள் வரக்கூடாது என பிளான் போட்ட முக்கிய தலைகள்”.. போட்டு உடைத்த திருச்சி சூர்யா! -
அண்ணாமலைக்கு இந்த பவர்ஃபுல் போஸ்ட்டிங் தர்றாரா மோடி.. கோவை பிடிவாதம் உடைந்ததா? லாபமா? நஷ்டமா -
“நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன்..” திருமாவளவன் அறிவித்த வேட்பாளர் பேச்சால் குழப்பம்! -
கொங்கு வேளாளர் கவுண்டரை புறக்கணிச்சிட்டாங்க... காங்கிரஸ் மீது ஜோதிமணி எம்பி குற்றச்சாட்டு -
திருநெல்வேலி 35 வருட அடையாளம் சார்.. யார் இந்த நயினார் நாகேந்திரன்.. சாத்தூரில் மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications