அசத்தல்.. வெளிமாநில தொழிலாளர்களை அனுப்பும் பணி தொடங்கியது.. கை தட்டலுடன் கிளம்பிய ரயில்
ஹைதராபாத்: வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊர் அனுப்பும் பணி துவங்கியுள்ளது. முதல்கட்டமாக தெலுங்கானாவிலிருந்து 1200 தொழிலாளர்கள், ஜார்கண்ட் கிளம்பினர். கை தட்டி, அதிகாரிகள் அவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
Recommended Video
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப மத்திய அரசு சிறப்பு அனுமதி அளித்துள்ளது.
தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கான திட்டத்தை மாநில அரசுகள் வகுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் ஆணை பிறப்பித்துள்ளது.

போர்க்கொடி
அதேவேளையில் கொரோனா தொற்று இல்லாதவர்களை மட்டுமே சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்றும் மாநில அரசுகளை உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. மஹாராஷ்டிரா, சூரத் போன்ற நகரங்களில் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கூறி போர்க்கொடி உயர்த்தியிருந்தனர். ஊரடங்கு காரணமாக வேலையின்றி, வருமானமின்றி ஒரே இடத்தில் தங்களால் அடைபட்டு கிடக்க முடியாது என புலம் பெயர் தொழிலாளர்கள் சூரத் வீதிகளில் இறங்கி போர்க்குரல் உயர்த்தினர்.

தெலுங்கானா
இந்த நிலையில்தான், மத்திய அரசு இப்படி ஒரு முடிவை எடுத்தது. இந்த நிலையில், தெலுங்கானாவின் லிங்கம்பள்ளியில் இருந்து ஜார்க்கண்டின் ஹதியாவுக்கு 1200 தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு, முதல் ரயில் இன்று அதிகாலை 4:50 மணிக்கு தனது பயணத்தைத் தொடங்கியது.

24 கோச் ரயில்
24 கோச் கொண்ட இந்த ரயில் இன்று இரவு 11 மணிக்கு ஜார்க்கண்டில் உள்ள ஹதியாவுக்கு சென்று சேரும். பயணத்தின்போது சமூக இடைவெளி பராமரிக்கப்படுகிறது. சொந்த மாநிலங்கள் சென்ற பிறகு, தனிமைப்படுத்தல் உள்ளிட்ட அனைத்து உரிய செயல்முறைகளும் அவர்களுக்கு அரசின் வழிகாட்டுதல்களின்படி பின்பற்றப்படும். ரயில் கிளம்பும் மாநிலம், சென்று சேரும் மாநிலம் ஆகியவற்றின் ஒப்புதல்கள் இருந்தால் மட்டுமே ரயில்களை இயக்க ரயில்வே துறை சம்மதிக்கும்.

குஜராத் ரயில்
குஜராத்திலிருந்து ஒடிசாவுக்கு புறப்படும் இரண்டாவது ரயில் இன்று மாலை 4 மணிக்கு கிளம்புகிறது. குஜராத்தின் சூரத்திலிருந்து ஒடிசாவின் கஞ்சம் வரை செல்லும் ரயில், மாலை 4 மணிக்கு புறப்படும். சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அந்தந்த மாநிலங்களுக்கு திருப்பி அனுப்ப இந்திய ரயில்வேயின் சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications