தெலங்கானா ஹெலிகாப்டர் விபத்து - தமிழக பெண் விமானி உள்பட 2 பேர் உடல் கருகி பலி
தெலங்கானா மாநிலத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் தமிழக பெண் விமானி உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் தனியார் ஏவியேஷன் அகாடமிக்கு சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானது. இதில் தமிழக பெண் விமானி உள்பட 2 விமானிகள் உயிரிழந்தனர்.
தெலுங்கானா மாநிலத்தில் பிளை ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் விமான நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று ஆந்திரா மாநிலம் குண்டூரில் இருந்து தெலுங்கானாவிற்கு பறந்து சென்றது.

அப்போது, நல்கொண்டா மாவட்டம் கிருஷ்ணா நதியின் நாகார்ஜுனசாகர் அணைக்கு அருகில் உள்ள கிராமத்தில் பறந்தபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த தமிழக விமானி உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
விபத்தில் உயிரிழந்த பயிற்சி விமானியின் உடலை மீட்டு பரிசோதனை செய்தனர். அப்போது அந்த பெண் தமிழகத்தைச் சேர்ந்த மஹிமா, எனத் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
விபத்து நிகழ்ந்த இடத்தில் தீ எரிந்து கொண்டிருப்பதால் புகை மூட்டமாக காணப்படுகிறது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு காவல்துறையினரும் தீயணைப்பு மீட்பு படையினரும் விரைந்துள்ளனர். வருவாய்த்துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விவசாய நிலங்களில் இருந்த உயர் அழுத்த மின் கம்பிகளில் ஹெலிகாப்டர் மோதியது விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பயிற்சி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து விமானப்படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய போது பலத்த சத்தம் கேட்டதாக உள்ளூர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications