மதுபான ஊழல்:தெலுங்கானா முதல்வர் மகள் கவிதாவிடம் 7 மணிநேரம் சிபிஐ தீவிர விசாரணை..அடுத்து கைது?
ஹைதராபாத்: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும் ராஜ்யசபா எம்.பி.யுமான கவிதா விடம் சிபிஐ அதிகாரிகள் 7 மணிநேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லியில் ஆம் ஆத்மி அரசானது தனியார் மதுபான கடைகளுக்கு அனுமதி, சலுகைகள் வழங்கியது. ஆனால் ஆம் ஆத்மி அரசின் இந்த கொள்கை முடிவில் பெரும் ஊழல் நடந்துள்ளது என்பது விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை குற்றச்சாட்டு, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது பல்வேறு நடவடிக்கைகள் அடுத்தடுத்து பாய்ந்தன. இதனால் ஆம் ஆத்மி- பாஜக இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

தற்போது அதே பாணியில் தெலுங்கானாவில் கால் வைத்துள்ளது சிபிஐ. தெலுங்கானா மதுபான கொள்கை ஊழலில் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா எம்.பிக்கு தொடர்பு உள்லது என்ப பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டி இருந்தனர். ஆனால் இதனை கவிதா எம்.பி. மறுத்திருந்தார்.
இந்த நிலையில் மதுபான கொள்கை ஊழல் விசாரணை தொடர்பாக கவிதாவுக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸ் அடிப்படையில், ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் கவிதாவின் இல்லத்துக்கு சிபிஐ அதிகாரிகள் நேற்று சென்றனர். பின்னர் கவிதாவிடம் சுமார் 7 மணிநேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது கவிதா வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கவிதாவிடம் 7 மணிநேரம் நடத்தப்பட்ட விசாரணை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications