"பாலியல் தொழிலாளி போல.." திடீரென இந்தியாவிலிருந்து கிளம்பிய இங்கிலாந்து அழகி.. பகீர் குற்றச்சாட்டு
ஹைதராபாத்: இந்தாண்டு தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உலக அழகி போட்டி நடைபெறுகிறது. இதற்கிடையே உலக அழகி போட்டியில் பங்கேற்க இந்தியா வந்திருந்த இங்கிலாந்து அழகி, திடீரென போட்டியில் இருந்து வெளியேறியிருக்கிறார். இதற்கு அவர் சொன்ன காரணங்கள் தான் பெரும் விவாதம் ஆகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் உலக அழகி போட்டி நடைபெறும். இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்பார்கள். மிஸ் வேர்ல்ட் 2025 அழகி போட்டி இந்தாண்டு தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் மையத்தில் வரும் மே 31ம் தேதி நடைபெறுகிறது.

உலக அழகி
இந்தியாவில் உலக அழகி போட்டி நடைபெறுவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்பு 1996 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் உலக அழகி போட்டி இந்தியாவில் நடந்துள்ளது. இப்போது மூன்றாவது முறையாக உலக அழகி போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க உளகெங்கும் இருந்து அழகிகள் ஹைதராபாத்தில் குவிந்துள்ளனர்.
இதற்கிடையே உலக அழகி போட்டியில் பங்கேற்க ஹைதராபாத் வந்திருந்த மிஸ் இங்கிலாந்து அழகி மில்லா மேகி திடீரென போட்டியிலிருந்து பாதியிலேயே விலகியுள்ளார். கடந்த 74 ஆண்டுகளில் உலக அழகி போட்டியில் இருந்து இங்கிலாந்து அழகி இதுபோல வெளியேறுவது இதுவே முதல்முறையாகும். மேலும், அவர் இங்கிலாந்தில் வெளியாகும் தி சன் இதழுக்கு ஏன் போட்டியில் இருந்து விலகினார் என்பது குறித்தும் பேட்டியளித்துள்ளார்.
பழமையான காலத்தில் சிக்கிக்கொண்டனர்
உலகில் எதாவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனப் போட்டியில் பங்கேற்க வந்ததாகக் குறிப்பிட்ட அவர், ஆனால் உலக அழகி போட்டி இன்னும் பழமையான காலத்தில் சிக்கியுள்ளதாகவும் பெண்களைக் குரங்குகளைப் போல நடத்தும் நிலையே போட்டியில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், போட்டியில் நடந்த சில விஷயங்கள் தன்னை விபச்சாரியாக உணர வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக அழகி போட்டியில் பங்கேற்கக் கடந்த மே 7ம் தேதி இந்தியா வந்த அவர், மே 16ம் தேதியே தாயகம் திரும்பிவிட்டாராம். பிரிட்டன் இதழுக்கு அவர் அளித்த பேட்டி இப்போது வெளியாகியுள்ள நிலையில், அது பேசுபொருளாக மாறியுள்ளது. இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "உலக அழகி போட்டியில் பங்கேற்று மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள். ஆனால் அது நடக்கப்போவதில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.
ஓவர் ரூல்ஸ்
என்னைப் பொறுத்தவரை உலக அழகி போட்டி காலத்திற்கு ஏற்ப மாறவில்லை.. அது கடந்த காலத்திலேயே சிக்கிக் கொண்டது. என்னால் அதில் பங்கேற்க முடியாது" என்றார். மேலும், உலக அழகி போட்டியில் உள்ள சில கட்டுப்பாடுகளையும் அவர் விளக்கினார். அதாவது போட்டியாளர்கள் அனைவரும் 24*7 மேக் அப் அணிந்திருக்க வேண்டுமாம். காலை உணவு சாப்பிடும்போது தொடங்கி எல்லா நேரங்களிலும் பெரிய கவுன் அணிந்திருக்க வேண்டுமாம்.
அவர் மேலும் கூறுகையில், "இதெல்லாம் கூட ஓகே.. ஆனால், நிகழ்ச்சிக்கு ஸ்பான்சர் செய்த ஆண்களுடன் கட்டாயம் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்றனர். ஒவ்வொரு டேபிளிலும் 6 ஆண் விருந்தினர்களுக்கு இரண்டு பெண்கள் என அமர வைக்கப்பட்டனர். மாலை முதல் இரவு வரை அவர்களுடன் பேசி சிரிக்கச் சொன்னார்கள். இது நம்பமுடியாததாக இருந்தது. இது மிகவும் தவறு என்றே எனக்குத் தோன்றியது.
பாலியல் தொழிலாளி போல
இருந்தாலும் பரவாயில்லை என்று நான் ஒரு கட்டத்தில் அவர்களுடன் நான் எதற்காகப் போட்டியில் பங்கேற்க வந்தேன் என்பதை விளக்க முயன்றேன். ஆனால், அவர்களுக்கு அதில் எல்லாம் அக்கறை இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. அங்கு நடந்தவை என்னைச் சங்கடப்படுத்தியது.
நான் பணக்காரர்களின் பொழுது போக்காக இருக்கு உலக அழகி போட்டியில் பங்கேற்க வரவில்லை. ஆனால், அங்கு நடப்பதைப் பார்த்தால் உலக அழகி போட்டி காலாவதியானது போலவே தெரிந்தது. அது கடந்த காலத்தில் சிக்கிக்கொண்டது. அங்கு நடந்தவை எல்லாம் என்னை ஒரு பாலியல் தொழிலாளி போல உணர வைத்தனர்" என்றார்.
-
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications