இந்தியாவில் எப்போது ஸ்புட்னிக் வி தடுப்பூசி மனித பரிசோதனை...டாக்டர் ரெட்டி புதிய தகவல்!!
ஐதராபாத்: இந்தியாவில் இன்னும் சில வாரங்களில் ரஷ்ய தயாரிப்பு கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி மூன்றாம் கட்ட மனித பரிசோதனை துவங்கும் என்று டாக்டர் ரெட்டி மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா தயாரித்து இருக்கும் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பு மருந்து மனித பரிசோதனை மேற்கொள்வதற்கும், இந்த மருந்தை இந்தியாவில் தயாரிப்பதற்கும் ஐதராபாத்தில் இருக்கும் டாக்டர் ரெட்டி லேபாரட்டரியுடன் ரஷ்யா சமீபத்தில் ஒப்பந்தம் மேற்கொண்டு இருந்தது. இதையடுத்து இந்தியாவில் மனித பரிசோதனை மேற்கொள்வதற்கு இந்திய அரசிடம் டாக்டர் ரெட்டி நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.

டாக்டர் ரெட்டி
இந்த நிலையில் இந்தியாவில் மனித பரிசோதனை இன்னும் சில வாரங்களில் துவங்கும் என்று டாக்டர் ரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தீபக் சாப்ரா ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்து இருக்கும் பேட்டியில், ''ரஷ்ய தயாரிப்பு கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி நாடு முழுவதும் இருக்கும் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் இன்னும் சில வாரங்களில் 1000 முதல் 2000 வரையிலான தன்னார்வலர்களிடம் நடத்தப்படும்.

இந்தியா
இதற்கு முன்னதாக இந்தியாவில் மனித பரிசோதனை மேற்கொள்வதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் இருந்து அனுமதி கிடைக்க வேண்டும். இது இன்னும் சில வாரங்களில் கிடைத்து விடும் என்று நம்புகிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.

எப்போது
இந்தியாவில் இந்த மருந்து தயாரிக்க டாக்டர் ரெட்டி நிறுவனத்துக்கும், ரஷ்ய நேரடி முதலீட்டு நிதிக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. நடப்பு ஆண்டு இறுதிக்குள் இந்த மருந்து இந்தியாவுக்கு கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால், இதை சாப்ரா மறுத்து இருக்கிறார். இந்தியாவில் இந்த மருந்து கிடைப்பதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகலாம் என்று தெரிவித்துள்ளது.

பதிவு
இந்தியாவில் 100 மில்லியன் டோஸ் மருந்து தயாரிப்பதற்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. உலகிலேயே ரஷ்யாதான் முதன் முதலாக ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தை பதிவு செய்து இருக்கிறது.
-
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications