இந்தியாவில் எப்போது ஸ்புட்னிக் வி தடுப்பூசி மனித பரிசோதனை...டாக்டர் ரெட்டி புதிய தகவல்!!
ஐதராபாத்: இந்தியாவில் இன்னும் சில வாரங்களில் ரஷ்ய தயாரிப்பு கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி மூன்றாம் கட்ட மனித பரிசோதனை துவங்கும் என்று டாக்டர் ரெட்டி மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா தயாரித்து இருக்கும் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பு மருந்து மனித பரிசோதனை மேற்கொள்வதற்கும், இந்த மருந்தை இந்தியாவில் தயாரிப்பதற்கும் ஐதராபாத்தில் இருக்கும் டாக்டர் ரெட்டி லேபாரட்டரியுடன் ரஷ்யா சமீபத்தில் ஒப்பந்தம் மேற்கொண்டு இருந்தது. இதையடுத்து இந்தியாவில் மனித பரிசோதனை மேற்கொள்வதற்கு இந்திய அரசிடம் டாக்டர் ரெட்டி நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.

டாக்டர் ரெட்டி
இந்த நிலையில் இந்தியாவில் மனித பரிசோதனை இன்னும் சில வாரங்களில் துவங்கும் என்று டாக்டர் ரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தீபக் சாப்ரா ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்து இருக்கும் பேட்டியில், ''ரஷ்ய தயாரிப்பு கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி நாடு முழுவதும் இருக்கும் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் இன்னும் சில வாரங்களில் 1000 முதல் 2000 வரையிலான தன்னார்வலர்களிடம் நடத்தப்படும்.

இந்தியா
இதற்கு முன்னதாக இந்தியாவில் மனித பரிசோதனை மேற்கொள்வதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் இருந்து அனுமதி கிடைக்க வேண்டும். இது இன்னும் சில வாரங்களில் கிடைத்து விடும் என்று நம்புகிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.

எப்போது
இந்தியாவில் இந்த மருந்து தயாரிக்க டாக்டர் ரெட்டி நிறுவனத்துக்கும், ரஷ்ய நேரடி முதலீட்டு நிதிக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. நடப்பு ஆண்டு இறுதிக்குள் இந்த மருந்து இந்தியாவுக்கு கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால், இதை சாப்ரா மறுத்து இருக்கிறார். இந்தியாவில் இந்த மருந்து கிடைப்பதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகலாம் என்று தெரிவித்துள்ளது.

பதிவு
இந்தியாவில் 100 மில்லியன் டோஸ் மருந்து தயாரிப்பதற்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. உலகிலேயே ரஷ்யாதான் முதன் முதலாக ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தை பதிவு செய்து இருக்கிறது.
-
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
"எங்களை ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க சொன்னதே அமெரிக்கா தான்.." ரகசியத்தை உடைத்த இந்தியா! என்ன நடந்தது -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு












Click it and Unblock the Notifications