தெலுங்கானா: காங்கிரஸிடம் போராடி மன்றாடி ஒரே ஒரு தொகுதியை வாங்கிய பரிதாப இந்திய கம்யூனிஸ்ட் கட்சி!
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதியை காங்கிரஸ் ஒதுக்கி உள்ளது. மேலும் சட்டசபை தேர்தலுக்கு பின் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 எம்.எல்.சி. இடங்கள் வழங்கப்படும் எனவும் காங்கிரஸ் உறுதி அளித்துள்ளது.
நாடு விடுதலைக்கு முன்னரே தெலுங்கானாவில் இடதுசாரிகள் வேர்பிடித்து விஸ்வரூபம் காட்டினர். தெலுங்கானா தனி மாநில போராட்டமாகட்டும், ஆயுதப் போராட்டமாகட்டும் புரட்சிகளின் மைய அச்சாணியாக ஆந்திரத்து இடதுசாரிகள் இருந்தனர். காலம்தான் எத்தனையோ விசித்திரங்களை கொண்டு சேர்க்கிறது.

தற்போது தெலுங்கானா சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தெலுங்கானாவில் ஒரே கட்டமாக வரும் 30-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தின. ஆனால் இந்தப் பேச்சுவார்த்தை இழுபறியாக நீடித்தது. இதனையடுத்து காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விலகியது. அத்துடன் 17 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது. அதே நேரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் தெலுங்கானாவின் 119 தொகுதிகளில் காங்கிரஸுக்கு ஒரே ஒரு தொகுதி ஒதுக்கி உள்ளது காங்கிரஸ். அத்துடன் சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் 2 எம்.எல்.சி. இடங்கள் தருவதாகவும் காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருக்கிறது. ஒரே ஒரு தொகுதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பெற்றுக் கொள்ள ஒப்புக் கொண்டாலும் அக்கட்சியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. இதனால் இந்த முடிவை கம்யூனிஸ்ட் கட்சி மறுபரிசீலனை செய்யும் எனவும் கூறப்படுகிறது.
-
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications