தெலுங்கானாவில் அதிசய கிணறு.. 50 ஆண்டுகளாக நடக்கும் ஆச்சரியமான விஷயம்.. மக்கள் வியப்பு
ஹைதராபாத்: சரியாக 20 முதல் 30 வருடங்களுக்கு முன்பு வரை பலரும் கிணறுகளில் தான் தண்ணீர் எடுத்து பருகி இருப்பார்கள். பல இடங்களில் கிணறு தான் தாகம் தீர்த்து வந்தது. கிணறுகள் பொதுவாக ஒரு கட்டத்தில் வற்றிப்போகும். ஆனால் தெலுங்கானா மாநிலம் ராமகுண்டத்தில் உள்ள ஒரு கிணறு 50 வருடங்களை கடந்து இன்று வரை வற்றவே இல்லை.. ஆச்சரியமான கிணறு பற்றி பார்ப்போம்.
வீட்டுக்கு வீடு குடிநீர் பைப் மூலமாக விநியோகம் செய்யப்பட்டாலும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இன்றும் கிணறுதான் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கிறது. அப்படித்தான் தெலங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டத்தில் ராமகுண்டத்தில் இருக்கும் கிணறு, அந்த பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்தது.

மிகவும் சுவையான அந்த கிணற்று நீரை பலரும் குடிநீராக பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தற்போது நல்ல தண்ணீரை நகராட்சி, ஊராட்சிகளே பைப் மூலம் வழங்குவதால், இந்த ஊற்று கிணறு பெரிதாக பயன்படுவது இல்லை... எனினும் ராமகுண்டம் மக்கள் அந்த கிணறை பொக்கிசம் போல் பாதுகாத்து வருகிறார்கள்.
தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் ராமகுண்டத்தில் உள்ள பிபவர் ஹவுஸ் சௌராஸ்தாவில் ஓ சாய் என்ற ஹோட்டல் இருக்கிறது. அங்குள்ள மிகப்பெரிய நண்ணீர் கிணற்றுக்கு அற்புதமான வியப்பான வரலாறு இருக்கிறது. இந்த கிணற்றில் உள்ள நீரைத்தான் ராமகுண்டத்தை சுற்றியுள்ள 30 கிராம மக்கள் குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். சுமார் 30 கிராமங்களுக்கு தண்ணீர் வழங்கிய இந்த ஊற்று கிணறு, இன்றும் பல வழிப்போக்கர்களின் தாகத்தை தீர்த்து வருகிறது.
பல வருடங்ளுக்கு முன்பு பெத்தப்பள்ளி மாவட்டம் ராமகுண்டத்தை சுற்றியுள்ள ஏராளமான கிராம மக்கள் தங்கள் ஊரில் இருந்து சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் வழியாகவும், நடந்தும் வந்து இந்த ஊற்று கிணற்றில் தண்ணீர் எடுத்து குடிக்க பயன்படுத்தி வந்துள்ளார்கள். ஆனால் ஒருமுறை கூட கிணறு வற்றியதே இல்லையாம். சில சமயம் மட்டும் சேறு கிணற்றில் இருந்து எட்டி பார்க்கும் என்கிறார்கள்.
இந்த ஊற்று கிணற்றை ஹனுமய்யா என்பவர் தனது சொந்தப் பணத்தை செலவு செய்து கிணற்றின் கட்டுமான பணிகளை மேற்கொண்டு மக்களுக்கு சிரமமின்றி தண்ணீர் கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளார். அந்த கிணற்றில் பெரிய அரச மரம் ஒன்றிருந்தது. அந்த அரச மர கிணற்றை ராவி செட்டு உட பாவி என்று அழைத்து வந்துள்ளார்கள். இன்று பயன்படுத்தவில்லை என்கிற போதிலும், அந்த கிணற்றின் உரிமையாளரான சாய் ஹோட்டலின் மேலாளர் அப்சல். அவ்வப்போது சுத்தம் செய்து பராமரித்து வருகிறார்.
தெலுங்கானாவின் பல பகுதிகளில் இன்றும் கோடைக்காலம் வந்துவிட்டாலே பல கிராமங்களில் உள்ள ஊற்றுக் கிணறுகள் நீரின்றி முற்றிலும் வற்றி போய்விடும். மீண்டும் நல்ல மழை வரும் போது தான் தண்ணீர் ஊற்று உருவாகும். ஆனால் ராமகுண்டம் அரச மரக் கிணற்றில் எப்போதும் தண்ணீர் நிரம்பியே இருக்குமாம். இந்த தண்ணீரின் சுவை 50 ஆண்டுகளுக்கு முன்பு எப்படியிருந்ததோ அப்படியே இன்று வரை இருக்கிறதாம்.
இன்றைக்கு தண்ணீரில் சுவை ஏற்படுத்த எதை எதையோ கலக்குகிறார்கள். அதேபோல் ஆர்ஓவும் செய்யப்படுகிறது. அப்படி செய்து உருவாக்கப்படும் மினரல் வாட்டரை விட ராமகுண்டம் கிணற்றின் தண்ணீர் சுவையாக இருக்கும் என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.
இந்த கிணற்று தண்ணீரை வாகன ஓட்டிகள் பலர் குடித்து செல்கிறார்கள்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications