பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமியின் 32 வார கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி மறுப்பு!
டெல்லி: பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமியின் 32 வார கர்ப்பத்தை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது.
சண்டிகாரில் பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்ட சிறுமியின் வயிற்றில் வளரும் கருவை கலைப்பதற்கு கடந்த ஜூலை 18ம் தேதி மாவட்ட நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனையத்து சிறுமி சார்பில், அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு தொடர்பாக கடந்த 24ம் தேதி விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், பாதிக்கப்பட்ட சிறுமியை பரிசோதனை செய்து ஜூலை 26ம் தேதிக்குள் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி மருத்துவ அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மருத்துவ அறிக்கை
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிறுமியின் கருவை கலைக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. கருவை கலைப்பது என்பது பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நல்லது அல்ல என சிறுமி குறித்து தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ அறிக்கையை மேற்கொள்காட்டி உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

உறவுக்காரர் சீரழிப்பு
இந்தியாவிலுள்ள சட்டப்படி அதிகபட்சமாக 20 வார காலம் வரையிலான கருவைதான் கலைக்க முடியும் என்பதால் நீதிமன்றத்தை சிறுமி தரப்பு அணுகியிருந்தது. உறவுக்காரர் தொடர்ந்து சீரழிந்ததால் அந்தசிறுமி கருவுற்றிருந்தார்.

சிகிச்சையில் திருப்தி
சிறுமி சார்பில் ஆஜரான வழக்கறிஞரோ, இந்த சிறு வயதில் முழு அளவுக்கான கருவை தாங்கும் சக்தி அந்த சிறுமிக்கு இல்லை என வாதம் முன்வைத்தபோதும், மருத்துவர்கள் சிறுமிக்கு அளித்துவரும் சிகிச்சையை அடிப்படையாக வைத்து, பாதுகாப்புக்கு உறுதியளித்ததால் உச்சநீதிமன்றம் இந்த முடிவுக்கு வந்துள்ளது.

வழிகாட்ட உத்தரவு
அதேநேரம், கருக்கலைப்பு குறித்து வழிமுறைகளை உருவாக்க மாநிலங்களுக்கு ஆலோசனை வழங்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications