14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த காதலன் - மனமுடைந்த பெண்ணின் தந்தை தற்கொலை
சிலிகுரி: மேற்கு வங்காளத்தில் காதலிப்பதாக கூறி தனது மகளை ஒருவன் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததோடு அவள் விபச்சார விடுதியில் தள்ளப்பட்ட தகவலையும் அறிந்த தந்தை மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
மேற்கு வங்காளம் மாநிலம், சிலிகுரி நகரையடுத்துள்ள அம்பாரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயின் மகளான 14 வயது சிறுமி ஒருவர்அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தாள்.

அதே கிராமத்தைச் சேர்ந்த பிண்டு பர்மன் என்பவனை அவர் காதலித்து வந்தார். பிண்டு, அந்த இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறி, கூச் பெஹார்க்கு அவரைத் தனியாக வரவழைத்தான்.
கடந்த மாதம் 14 ஆம் தேதி பிண்டுவை நம்பிப்போன அந்த இளம்பெண்ணை அவர் தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து, சிலிகுரிக்கு அழைத்துச் சென்று பல நாட்களுக்கு அவளை ஒரு வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.
பின்னர், நண்பர்களுடன் சேர்ந்து கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள சிவப்பு விளக்கு பகுதியில் பணத்துக்காக அவளை விற்றுள்ளார். அந்த இளம்பெண்ணின் தந்தை அவளைக் காணவில்லை என கொடுத்த புகாரின் பேரில் சிலிகுரி போலீசார் அவளை கூச் பெஹாரின் சிவப்பு விளக்கு பகுதியிலிருந்து மீட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை தந்தையிடம் ஒப்படைத்தனர்.
மகளுக்கு நேர்ந்த கொடுமையை எண்ணி மனமுடைந்துப்போன அவளது தந்தை துக்கம் தாங்க முடியாமல் மறுநாளே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் இன்று தெரிவித்துள்ளனர். தற்போது பிண்டுவையும், அவனது ஒரு நண்பரையும் கைது செய்துள்ள சிலிகுரி போலீசார், மேலும் இருவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications