14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த காதலன் - மனமுடைந்த பெண்ணின் தந்தை தற்கொலை
சிலிகுரி: மேற்கு வங்காளத்தில் காதலிப்பதாக கூறி தனது மகளை ஒருவன் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததோடு அவள் விபச்சார விடுதியில் தள்ளப்பட்ட தகவலையும் அறிந்த தந்தை மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
மேற்கு வங்காளம் மாநிலம், சிலிகுரி நகரையடுத்துள்ள அம்பாரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயின் மகளான 14 வயது சிறுமி ஒருவர்அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தாள்.

அதே கிராமத்தைச் சேர்ந்த பிண்டு பர்மன் என்பவனை அவர் காதலித்து வந்தார். பிண்டு, அந்த இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறி, கூச் பெஹார்க்கு அவரைத் தனியாக வரவழைத்தான்.
கடந்த மாதம் 14 ஆம் தேதி பிண்டுவை நம்பிப்போன அந்த இளம்பெண்ணை அவர் தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து, சிலிகுரிக்கு அழைத்துச் சென்று பல நாட்களுக்கு அவளை ஒரு வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.
பின்னர், நண்பர்களுடன் சேர்ந்து கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள சிவப்பு விளக்கு பகுதியில் பணத்துக்காக அவளை விற்றுள்ளார். அந்த இளம்பெண்ணின் தந்தை அவளைக் காணவில்லை என கொடுத்த புகாரின் பேரில் சிலிகுரி போலீசார் அவளை கூச் பெஹாரின் சிவப்பு விளக்கு பகுதியிலிருந்து மீட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை தந்தையிடம் ஒப்படைத்தனர்.
மகளுக்கு நேர்ந்த கொடுமையை எண்ணி மனமுடைந்துப்போன அவளது தந்தை துக்கம் தாங்க முடியாமல் மறுநாளே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் இன்று தெரிவித்துள்ளனர். தற்போது பிண்டுவையும், அவனது ஒரு நண்பரையும் கைது செய்துள்ள சிலிகுரி போலீசார், மேலும் இருவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
-
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications