புது ரூபாய் நோட்டை கையாள 22500 ஏடிஎம்கள் ரெடி.. 1000 ரூபாய் அறிமுகம் இல்லை: ஜேட்லி
டெல்லி: புதிய ரூபாய் நோட்டுக்களை கையாளும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட 22,500 ஏடிஎம்கள் இன்று முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் அளவிலும், கனத்திலும் மாறுபட்டு இருப்பதால் தற்போதுள்ள ஏடிஎம் மிஷின்களில் மாற்றம் செய்யப்பட வேண்டியுள்ளது. எனவே அந்த நோட்டுக்கள் ஏடிஎம் மையங்களில் கிடைக்கவில்லை. இதனால் மக்கள் நீண்ட கியூவில் ஏடிஎம்கள் மற்றும் வங்கிகள் முன்பு குவிகிறார்கள்.

நாடு முழுக்க உள்ள 2 லட்சம் ஏடிஎம் மையங்களிலும் புதிய நோட்டுக்களுக்கு ஏற்ப புரோக்ராம் செய்ய மூன்று வாரங்கள் ஆகும் என மத்திய அரசு சில தினங்கள் முன்பு அறிவித்திருந்த நிலையில், அதில், 22,500 ஏடிஎம்கள் தற்போது மாற்றியமைக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக ஜேட்லி தெரிவித்தார்.
இதனால் ஏடிஎம்களில் பண புழக்கம் அதிகரித்து கூட்டம் குறையும் என்பது ஜேட்லி வாதமாக உள்ளது. ஆனால் மொத்த ஏடிஎம்கள் எண்ணிக்கையில் இது 10 சதவீதம் மட்டுமே என்பதால், பெரிய தாக்கத்தை உடனே ஏற்படுத்திவிடாது. படிப்படியாக அனைத்து ஏடிஎம்களும், அனைத்து வகை பணத்தையும் தந்தால் மட்டுமே நிலைமை சீராகும்.
இதனிடையே, இப்போதைக்கு புதிய ரூ.1000 நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்படாது என்றும் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். மீண்டும் புதிய வகையில் ஆயிரம் ரூபாய் நோட்டு அறிமுகமாகும் என கூறப்பட்ட நிலையில், ஜேட்லி இப்படி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications