ஹரியானாவில் பயங்கரம். 4 நாட்களாக 40 பேர் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்
ஹரியானாவில் ஒரு பெண்ணை நான்கு நாட்களாக 40 பேர் பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
Recommended Video
சண்டிகார்: ஹரியானாவில் வேலை தேடி சென்ற 22 வயது பெண்ணை விடுதியில் அடைத்துவைத்து 4 நாட்களாக 40 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளர்.
ஹரியான மாநிலம் பஞ்சகுலாவில் 22 வயது பெண் ஒருவர் வேலை தேடி சென்றுள்ளார். அவரை சிலர் விருந்தினர் விடுதியில் அடைத்து வைத்து ஜூலை 15 ஆம் தேதியிலிருந்து ஜூலை 18 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் 40 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ஹரியானாவின் மோர்னி ஹில்ஸ் பகுதியில் நடந்த பலாத்காரம் சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட அந்த பெண் சண்டிகார் போலீஸில் புகார் செய்துள்ளார்.
மேலும், பலாத்காரம் செய்த குற்றவாளிகளில் ஒருவன் அந்த பெண்ணின் கணவருக்கு தெரிந்த நபர் என்றும் அந்த நபர்தான் தனக்கு அந்த விடுதியில் வேலை வாங்கி தருவதாகவும் உறுதியளித்தார் என்றும் அந்த பெண் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். அதோடு, வேலை தேடி சென்றபோதுதான் தன்னை விடுதியில் அடைத்துவைத்து 4 நாட்கள் 40 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர் என்று போலீஸில் தெரிவித்துள்ளார்.
பலாத்காரம் செய்யப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய விடுதிப் பணியாளர்கள் இரண்டு பேர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். இது குறித்து இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் சிங், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுவருகிறது என்று கூறினார்.